ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் | டூரிஸ்ட் பேமிலி : கன்னட நடிகர் சுதீப் பாராட்டு | ஜனநாயகன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையில் கடும் போட்டி | அர்ஜுன் தாஸின் நீண்ட நாள் கனவு நனவாகியது | ஹாலிவுட் யுனிவர்ஸ் பாணியில் உருவாகும் பென்ஸ் : இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் | தக் லைப் - நடிகர் ரகுமான் மகள் அறிமுகம்: ஏஆர் ரகுமான் வாழ்த்து | மகன் அகில் திருமணம்: அம்மா அமலா நெகிழ்ச்சிப் பதிவு | 'கல்கி 2' படத்தில் தீபிகா நடிக்கிறார்: விலகல் செய்தி வதந்தி… | கூலி படத்தில் இணைந்த டி.ராஜேந்தர் | லவ் மேரேஜ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமாவில் புயலை கிளப்பி உள்ளது. நடிகர் சங்க நிர்வாகிகள் மீதே பாலியல் புகார்கள் குவிந்து வருகிறது. இதனால் நடிகர் சங்க நிர்வாகிகள் மோகன்லால் உள்ளிட்ட அனைவரும் ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று நடிகரும், மத்திய இணை அமைச்சருமான சுரேஷ் கோபியிடம் இதுகுறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பிய போது அவர் ஆவேசமாக பதிலளித்தார். அவர் கூறும்போது “ஹேமா கமிஷன் அறிக்கை மூலம் ஊடகங்களுக்கு தற்போது தீனி கிடைத்து உள்ளது. ஆனால், ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். திட்டமிட்டு சினிமா என்ற மிகப்பெரிய இயக்கத்தை அழிக்க முயற்சி நடக்கிறது. நடிகைகள் அளித்துள்ள பாலியல் புகாருக்கான ஆதாரங்கள் என்ன?. புகார்கள் தற்போது குற்றச்சாட்டு வடிவில் உள்ளன. குற்றவாளிகள் யார் என்பதை நீதிமன்றம்தான் தீர்வு செய்யும்.
நான் தனிப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இங்கு வந்தேன். மலையாள நடிகர் சங்க அலுவலகத்தில் இருந்து நான் வரும் போது, இந்த கேள்விகளை கேட்கலாம். இந்த விஷயத்தை ஊதி பெருதாக்கி நீங்கள் (மீடியா) பணம் சம்பாதிக்க நினைக்கிறீர்கள். எந்த இடத்தில் எந்த விஷயத்தை கேட்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இவ்வாறு சுரேஷ் கோபி கூறினார்.