பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

'புதிய கீதை' படத்திற்குப் பிறகு சுமார் 21 வருட இடைவெளியில் விஜய் நடிக்கும் ஒரு படத்திற்கு யுவன் இசையமைப்பது 'தி கோட்' படம் மூலம் நடந்துள்ளது. இத்தனை வருட காலமாக யுவனுக்கு அப்படி ஒரு வாய்ப்பை இயக்குனர்களும் சரி, விஜய்யும் சரி ஏற்படுத்தித் தரவில்லை.
விஜய் நடிக்கும் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்ற வெங்கட் பிரபு, தனது தம்பி யுவனையே 'தி கோட்' படத்திற்கு இசையமைக்க வைத்தார். அப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்காத நிலைதான் தற்போது உள்ளது.
இந்நிலையில் இன்று 'தி கோட்' படத்தின் பத்திரிகையளார் சந்திப்பு நடைபெறுவதாக இருந்தது. அதை நேற்று இரவு திடீரென ரத்து செய்தார்கள். யுவனுக்காக வெங்கட் பிரபு தரப்பிலிருந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு கோரிக்கை வைத்தார்களாம்.
நாளை மறுதினம் யுவனின் பிறந்தநாளை முன்னிட்டு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தி நான்காவது சிங்கிளை வெளியிடலாம் என்று சொன்னார்களாம். அதை ஏற்றுக் கொண்ட தயாரிப்பு நிறுவனம் யுவனின் பிறந்தநாளை கொண்டாடும் விதத்திலும் பத்திரிகையாளர் சந்திப்பைத் தள்ளி வைத்து, அதையும், நான்காவது சிங்கிளையும் சேர்த்தே கொண்டாடுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதனால், இன்று ரத்தான சந்திப்பு நாளை மறுதினம் நடக்கும் என்பதே லேட்டஸ்ட் அப்டேட்.