ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் வேட்டையன். ரஜினியுடன் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. மேலும், அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் ரஜினி என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டாக நடித்திருக்கிறார் .
இந்த நேரத்தில் தற்போது வேட்டையன் படத்தின் முக்கிய கதைக்கரு ஒன்று கசிந்துள்ளது. அது என்னவென்றால், குற்றவாளிகளை என்கவுண்டர் செய்யும் ரஜினி கொலை குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை என்கவுண்டர் செய்கிறார். ஆனால் அதன் பிறகுதான் அந்த நபர் குற்றவாளி அல்ல. சில முக்கிய புள்ளிகள் அவரை குற்றவாளி ஆக்கி இருக்கிறார்கள் என்ற உண்மை ரஜினிக்கு தெரியவருகிறது. இதனால் கொதித்தெழும் ரஜினி, அந்த நபர் மீது வீண்பழி சுமத்தி தன்னை தவறுதலாக என்கவுண்டர் செய்ய வைத்த புள்ளிகளுக்கு எதிராக களமிறங்கி, அந்த நபரின் குடும்பத்திற்கு நீதி வாங்கி தருவதே இந்த வேட்டையன் படத்தின் முக்கிய கதைக்கரு என்பது தெரியவந்துள்ளது.