சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
ஜெயிலர் படத்தை அடுத்து ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் படம் வேட்டையன். ரஜினியுடன் அமிதாப்பச்சன், பஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், அபிராமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்றது. மேலும், அக்டோபர் 10ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தில் ரஜினி என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டாக நடித்திருக்கிறார் .
இந்த நேரத்தில் தற்போது வேட்டையன் படத்தின் முக்கிய கதைக்கரு ஒன்று கசிந்துள்ளது. அது என்னவென்றால், குற்றவாளிகளை என்கவுண்டர் செய்யும் ரஜினி கொலை குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை என்கவுண்டர் செய்கிறார். ஆனால் அதன் பிறகுதான் அந்த நபர் குற்றவாளி அல்ல. சில முக்கிய புள்ளிகள் அவரை குற்றவாளி ஆக்கி இருக்கிறார்கள் என்ற உண்மை ரஜினிக்கு தெரியவருகிறது. இதனால் கொதித்தெழும் ரஜினி, அந்த நபர் மீது வீண்பழி சுமத்தி தன்னை தவறுதலாக என்கவுண்டர் செய்ய வைத்த புள்ளிகளுக்கு எதிராக களமிறங்கி, அந்த நபரின் குடும்பத்திற்கு நீதி வாங்கி தருவதே இந்த வேட்டையன் படத்தின் முக்கிய கதைக்கரு என்பது தெரியவந்துள்ளது.