தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
இந்திய சினிமாவில் அடுத்த இரண்டு மாதங்களுக்கு எதிர்பார்க்கப்படும் இரண்டு படங்களாக இருப்பவை தமிழ்ப்படமான 'கங்குவா', தெலுங்குப் படமான 'புஷ்பா 2'. இந்த இரண்டு படங்களின் வெளியீட்டுத் தேதிகளை ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள்.
'கங்குவா' படம் நவம்பர் 14ம் தேதியும், 'புஷ்பா 2' படம் டிசம்பர் 6ம் தேதியும் வெளியாக உள்ளது. இரண்டு படங்களையுமே பான் இந்தியா வெளியீடாக பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள 'கேம் சேஞ்சர்' படத்தை டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள் எனத் தகவல் வெளியானது. இப்படத்தின் வெளியீடு பற்றி இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், கடந்த இரண்டு நாட்களாக இப்படத்தை 2025 பொங்கலுக்கு வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அதே சமயத்தில் ராம் சரணின் அப்பா சிரஞ்சீவி நடித்துள்ள 'விஷ்வம்பரா' படத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளார்களாம்.
ஒரு வேளை 'கேம் சேஞ்சர்' படம் பொங்கல் வெளியீடு என்றால் மகனுக்காக 'விஷ்வம்பாரா' படத்தை சிரஞ்சீவி தள்ளி வைப்பாரா என்ற கேள்வியும் டோலிவுட்டில் எழுந்துள்ளது.