மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ | 33 ஆண்டு நிறைவு என்ன கணக்கு?: அஜித் ரசிகர்களுக்கு தெரியுமா இந்த சேதி? | கந்தன் மலையில் நடிக்கும் எச்.ராஜா: பட அனுபவம் பகிரும் இயக்குனர் வீரமுருகன் | பிளாஷ்பேக் : கைதியாக நடித்த எம்ஜிஆர் | யு டியூபிலிருந்து சினிமாவிற்கு வரும் சில பிரபலங்கள் | ஒரே வாரத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர்கள் |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருகிறது. தற்போது தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். மறுபுறம் ஹிந்தியில் நடிகர் சல்மான் கானை வைத்து 'சிக்கந்தர்' எனும் படத்தினை இயக்கி வருகிறார்.
கடந்த சில வாரங்களாக ஏ.ஆர்.முருகதாஸ் கஜினி படத்தின் இரண்டாம் பாகம் இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் திடீரென சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் நடிகர் கார்த்தியை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் புதிய படத்தினை இயக்குவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.