இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா. பேமிலி ஸ்டார் படத்திற்கு பின் கல்கி படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றினார். தற்போது அடுத்தடுத்து கைவசம் படங்களை வைத்துள்ளார். இப்போது ‛ஷியாம் சிங்கா ராய்' பட இயக்குனர் ராகுல் சாங்கிருத்யன் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளார். விஜய் தேவரகொண்டாவின் 14வது படமாக உருவாகும் இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு துவங்குகிறது. 1850ம் ஆண்டு காலகட்ட படமாக கதை உருவாகிறது.
தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லூவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஹாலிவுட்டில் வெளியான ‛மம்மி' சீரியஸ், ‛டார்க் மேன்' சீரியஸ் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.