பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் நடிகர் விஜய் தேவரகொண்டா. பேமிலி ஸ்டார் படத்திற்கு பின் கல்கி படத்தில் சிறப்பு தோற்றத்தில் தோன்றினார். தற்போது அடுத்தடுத்து கைவசம் படங்களை வைத்துள்ளார். இப்போது ‛ஷியாம் சிங்கா ராய்' பட இயக்குனர் ராகுல் சாங்கிருத்யன் இயக்கத்தில் அடுத்து நடிக்கவுள்ளார். விஜய் தேவரகொண்டாவின் 14வது படமாக உருவாகும் இதனை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு 2025ம் ஆண்டு துவங்குகிறது. 1850ம் ஆண்டு காலகட்ட படமாக கதை உருவாகிறது.
தற்போது இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லூவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர் ஹாலிவுட்டில் வெளியான ‛மம்மி' சீரியஸ், ‛டார்க் மேன்' சீரியஸ் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.