ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வரலாற்று பேண்டஸி படமாக உருவாகியுள்ள படம் 'கங்குவா'. பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். நவம்பர் 14ம் தேதி ரிலீசாகும் இப்படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
சென்னையில் படத்தின் 3டி டிரைலர் வெளியீட்டு விழாவில் கங்குவா குழுவுடன் சூர்யா கலந்துகொண்டார்.
அப்போது சூர்யா பேசியதாவது: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இல்லையென்றால் கங்குவா திரைப்படம் நிகழ்ந்திருக்காது. இந்தப் படத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் அழகாக இருந்தது. கிட்டத்தட்ட 170 நாள்கள் படப்பிடிப்பு நடத்தினோம். ஒரு கனவுபோல் உருவானது. பணத்தைத் தாண்டி முழு ஈடுபாடுடன் மொத்த குழுவும் உழைத்திருக்கிறோம். ஒளிப்பதிவாளர் வெற்றி, கங்குவாவின் தரத்தை எங்கோ கொண்டு சென்றுவிட்டார். இந்திய சினிமாவிலிருக்கும் படைப்பாளிகளும் இயக்குனர்களும் ஒளிப்பதிவைப் பார்த்து மிரண்டு போவார்கள். மிக பணிவாகவே இதைச் சொல்கிறேன்.
படத்தைப் பார்த்த பாலிவுட் தயாரிப்பாளர், இயக்குனர் கரண் ஜோஹர் இது எப்படி சாத்தியமானது என ஆச்சரியப்பட்டார். இதற்கு முன், இப்படியொரு திரையரங்க அனுபவத்தைக் கண்டிருக்க மாட்டீர்கள். 700 ஆண்டுகளுக்கு முந்தைய கதையான இது வெறும் சண்டைப்படமாக மட்டும் உருவாகவில்லை. ஒருவனுக்குள் இருக்கும் அகமும் புறமும் பேசப்பட்டிருக்கிறது. மன்னிப்பை பிரதானமாக வைத்திருக்கிறோம்.
ஒருத்தர் உண்மையாக வேலை செய்தாலே பலன் கிடைக்கும்போது கங்குவாவிற்கு 3000 பேர் வேலை செய்திருக்கின்றனர். மீண்டும் சொல்கிறேன், படம் நெருப்பு மாதிரி இருக்கும். கங்குவா படத்தை வாயை பிளந்து பார்ப்பார்கள்; தமிழ் சினிமாவில் இப்படி ஒரு படம் எடுக்க முடியும் என்பதை காட்டும் படமாக அமையும். படம் வெளியாகும் நவ.,14ம் தேதி இரட்டை தீபாவளியாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.