ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
தி கோட் படத்தை அடுத்து வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். அவருடன் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், மமீதா பைஜு, பிரியாமணி ஆகியோர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கிய நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் தமிழகம் முழுக்க சென்று தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டு வருகிறார் விஜய். அதனால் இந்த படத்தை மூன்றே மாதங்களில் முடித்துவிட்டு முழுநேர அரசியலில் குதிக்கப் போகிறார். அதன் காரணமாக தனது 69வது படத்தின் படப்பிடிப்புக்கு பெரிய அளவில் பிரேக் கொடுக்காமல் வேகமாக நடத்தி முடிக்குமாறு இயக்குனர் வினோத்திற்கு உத்தரவிட்டுள்ளார் விஜய்.