பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தி கோட் படத்தை அடுத்து வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். அவருடன் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், மமீதா பைஜு, பிரியாமணி ஆகியோர் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கிய நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. விரைவில் தமிழகம் முழுக்க சென்று தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட திட்டமிட்டு வருகிறார் விஜய். அதனால் இந்த படத்தை மூன்றே மாதங்களில் முடித்துவிட்டு முழுநேர அரசியலில் குதிக்கப் போகிறார். அதன் காரணமாக தனது 69வது படத்தின் படப்பிடிப்புக்கு பெரிய அளவில் பிரேக் கொடுக்காமல் வேகமாக நடத்தி முடிக்குமாறு இயக்குனர் வினோத்திற்கு உத்தரவிட்டுள்ளார் விஜய்.