தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா இருவரும் இன்று நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகின்றனர். இருவரும் பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, மாயாவி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்தனர். சில்லுனு ஒரு காதல் படத்திற்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது கங்குவா பட புரொமோசன் நிகழ்ச்சிகளில் இருவரும் கலந்து கொண்டனர்.
அப்போது சூர்யா கூறுகையில், "நான் நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் தான் ஜோதிகா கதாநாயகியாக அறிமுகமானார். எனக்கு தமிழ் தெரியும் ஆனாலும், வசனங்களைக் பேச தடுமாறி கொண்டிருந்தேன். ஜோதிகா முதல் படத்திலேயே வசனங்களை தடுமாறாமல் பேசினார். குறிப்பாக காக்க காக்க படத்தில் என்னை விட மூன்று மடங்கு சம்பளம் அதிகமாக வாங்கினார்" என நினைவு கூர்ந்தார் சூர்யா.