ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
சூர்யா நடித்த 'கங்குவா' படம் நேற்று முன்தினம் வெளியானது. கடும் விமர்சனங்களை எதிர் கொண்டு பான் இந்தியா படமாக ஓடி வருகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள அவரது 44வது படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது. அதற்கான படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது.
இந்நிலையில் சூர்யாவின் 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்குவது பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இப்படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஆர்ஜே பாலாஜி முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார். ஸ்கிரிப்ட் புத்தகத்தின் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டு, “நடந்து கொண்டிருக்கிறது… நாங்கள் நம்புகிறோம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
'கங்குவா' குறித்த விமர்சனங்கள் வெளிவந்த ஒரு நாளில் ஆர்ஜே பாலாஜி இப்படி பதிவிட்டிருப்பது ஆச்சரியமளிப்பதாக உள்ளது. 'கங்குவா' போன்ற விமர்சனங்கள் பெரும் அளவில் எழாதபடி சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் இருக்க வேண்டும் என்ற ஒரு பயம் அவரை வைத்து படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு இருக்கத்தானே செய்யும்.