விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்த 3 என்ற படத்தில் தனுஷின் நண்பராக காமெடி வேடத்தில் அறிமுகமானவர் சிவகார்த்திகேயன். அந்த படத்தில்தான் அனிருத்தும் அறிமுகமானார். அதன்பிறகு பாண்டிராஜ் இயக்கிய மெரினா படத்தில் ஹீரோவானார் சிவகார்த்திகேயன். பின்னர் எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், டாக்டர், மாவீரன், அமரன் என பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி இடத்தை பிடித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் அளித்துள்ள ஒரு பேட்டியில், என் மனைவி மட்டும் இல்லை என்றால் நான் எப்போதோ சினிமாவில் இருந்து வெளியேறி இருப்பேன் என்று கூறியிருக்கிறார். காரணம், சினிமாவில் யார் எங்கிருந்து நம்மை நோக்கி அம்பு விட்டு தாக்குவார்கள் என்று சொல்லவே முடியாது. அந்த அளவுக்கு பிரச்சனைகள் பல ரூபத்தில் வந்து நம்மை தாக்கும். அது போன்ற ஒரு பிரச்சனையால் ஒருமுறை பெரிய அளவில் நான் மனசுடைந்து விட்டேன். சினிமா வை விட்டே வெளியேற முடிவெடுத்தேன். அப்போது என் மனைவி தான் எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் அதை எதிர்த்து சமாளியுங்கள். சினிமாவை விட்டு மட்டும் ஒருபோதும் செல்லக்கூடாது என்று சொன்னார். அவர் அப்படி சொன்ன பிறகுதான் எந்த பிரச்னை வந்தாலும் எதிர்த்து நின்று சமாளிப்போம் என்ற முடிவுக்கு வந்தேன். அப்படி என் மனைவி சொல்லவில்லை என்றால் சினிமாவை விட்டு எப்போதோ வெளியேறி இருப்பேன் என்று கூறியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.