டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் | கேரளாவில் ஜனநாயகன் முதல் நாள் முதல் காட்சி 6 மணிக்கு தான் | ஷாருக்கானின் பதான் பட வசூலை முறியடிக்கும் துரந்தர் |

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'அமரன்'. 300 கோடி வசூல், 25 நாட்களைக் கடந்து ஓட்டம் என வெற்றிகரமான படமாக அமைந்தது. இந்த படத்தில் சாய் பல்லவியின் செல்போன் எண் என காட்டப்படும் நம்பர், மாணவர் வாகீசன் என்பவரது தாம். அந்த செல்போன் எண் சாய் பல்லவியின் உண்மையான செல்போன் எண் என பல ரசிகர்கள் வாகீசனைத் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்துள்ளனர். இதனால் மிகுந்த வேதனை அடைந்ததாக கூறி 'அமரன்' படக்குழுவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார் வாகீசன்.
மேலும் அமரன் திரைப்படத்தை திரையிலும், ஓடிடி தளத்திலும் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 1 கோடியே 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அமரன் படத்தில் வரும் மாணவரின் செல்போன் எண் வரும் காட்சி நீக்கப்பட்டு, புதிய தணிக்கை சான்றிதழ் பெறப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த வழக்கில் இழப்பீடு கோர முடியாது என்று கூறிய கோர்ட், வழக்கு விசாரணையை டிச.20ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.