இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா 2' படம் இந்திய அளவில் பெரும்பாலான தியேட்டர்களில் வெளியாகி உள்ளது. இந்தியாவில் உள்ள பல ஐமேக்ஸ் தியேட்டர்களையும் அப்படமே ஆக்கிரமித்துள்ளது. அப்படத்திற்கு அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கும் என்பதால் தியேட்டர்காரர்கள் தியேட்டர்களை தாராளமாக வழங்கினார்கள். அதை நிரூபிக்கும் விதத்திலும் முதல் நாள் வசூலாக உலக அளவில் 294 கோடிகளையும் அப்படம் வசூலித்துள்ளது.
இதனிடையே, இணையதளம் ஒன்று 'இன்டர்ஸ்டெல்லர்' படத்தின் ஐமேக்ஸ் ரிரிலீஸ் 'புஷ்பா 2' படம் காரணமாக வெளியாகவில்லை என்று செய்தி வெளியிட்டிருந்தது. அதன் சமூக வலைத்தள பக்கத்தில் நடிகை ஜான்வி கபூர் 'புஷ்பா 2' படத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளார். ஜான்வியின் பதிவுக்கு சினிமா ரசிகர்கள் பலரும் லைக் செய்துள்ளனர்.
“புஷ்பா 2 கூட சினிமாதான். மேற்கத்திய விஷயத்தில் ஆர்வம் காட்டுவதிலும், நம் சொந்த நாட்டிலிருந்து வரும் விஷயங்களைக் குறைத்து தகுதி நீக்கம் செய்வதிலும் நாம் ஏன் வெறித்தனமாக இருக்கிறோம். மற்றநாடுகளை பாராட்டுவது மற்றும் பெரிதாகப் பார்ப்பது, அதுவே நம் சினிமாவால் ஈர்க்கப்பட்டால் நாமே வெட்கப்படுவது வருத்தமே,” எனக் குறிப்பிட்டுள்ளார்.