ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சீனு ராமசாமி. 2007ம் ஆண்டு வெளியான 'கூடல் நகர்' படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதையடுத்து 'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலம் விஜய்சேதுபதியை பிரபலமாக்கினார். பின்னர் நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே, மாமனிதன், கோழிப்பண்ணை செல்லதுரை போன்ற படங்களை இயக்கினார். இவர் இயக்கி முடித்துள்ள இடிமுழக்கம், இடம் பொருள் ஏவல் படங்கள் வெளிவரவில்லை.
இவருடைய படங்களில் பாடல் எழுதிய ஒரு பெண் பாடலாசிரியையை காதலித்து வந்த நிலையில் 2007ம் ஆண்டு தர்ஷனா என்பவரை திருமணம் செய்துகொண்டார். 17 ஆண்டுகள் திருமண வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், இன்று திடீரென தாங்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிய உள்ளதாக சீனு ராமசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
‛‛அன்பானவர்களுக்கு வணக்கம். நானும் எனது மனைவி ஜிஎஸ் தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம். இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன்.அவரும் அறிவார். இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்.” என பதிவிட்டுள்ளார்.