பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் எஸ்.டி.சபா (சபாபதி தட்சிணாமூர்த்தி). விஜயகாந்த் நடித்த 'பரதன்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பிறகு பிரசாந்த் நடித்த 'எங்க தம்பி', லிவிங்ஸ்டன் நடித்த 'சுந்தர புருஷன்', பிரபுதேவா நடித்த 'வி.ஐ.பி', நந்தா நடித்த 'புன்னகை பூவே', ஜெய்வர்மா நடித்த 'நாம்', பிரபு நடித்த 'அ ஆ இ ஈ', மதுஷாலினி நடித்த 'பதினாறு' ஆகிய படங்களை இயக்கினார். தெலுங்கில் ஜெகபதி பாபு நடித்த 'பந்தெம்', கன்னடத்தில் 'ஜாலி பாய்' ஆகிய படங்களை இயக்கினார்.
61 வயதான சபா கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று திடீரென மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.