பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

அரசியலில் நேர்மை என்கிற பெயருக்கு இலக்கணமாக இன்று வரை பயணித்து வருபவர் மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்களில் முக்கியமானவரும் மூத்தவருமான நல்லகண்ணு. எந்த ஒரு அரசியல்வாதியும் கூட இவர் மீது ஒரு சிறு துளி குற்றச்சாட்டையோ அவதூறையோ இதுவரை கூறியது இல்லை. அந்த அளவிற்கு தன்னுடைய சொத்துக்கள், உடைமைகள் அனைத்தையும் கட்சிக்காகவும் மக்களுக்காகவும் அர்ப்பணித்து விட்டவர். நேர்மையான அரசியல் நடத்தி வரும் அவர் தற்போது 100 வயதை தொட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து அரசியல் சார்ந்தவர்களிடமிருந்து மட்டுமல்லாமல் திரை உலகை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் என பலரிடமிருந்தும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் இவரை நேரில் சென்று சந்தித்து தனது வாழ்த்துக்களை கூறி ஆசி பெற்று வந்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.