'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. | ஜெயலலிதா மீது விமர்சனம்: கல்லெறியில் இருந்து காப்பாற்றிய பாக்யராஜ்: ரஜினி சொன்ன ரகசியம் | 'படையப்பா, பாபா' படங்களின் ரிசல்ட்: ஜோசியர் போல சொன்ன பாக்யராஜ்: சுவாரஸ்யம் பகிர்ந்த ரஜினி | 'புஷ்பா 2' சாதனையை முறியடித்த 'துரந்தர்' | கடைசி நேர பரபரப்பில் 'பராசக்தி' தணிக்கை விவகாரம் | ''சினிமாவுக்கு கடின காலம்... காப்பாற்றுங்கள்'': குரல் கொடுத்த கார்த்திக் சுப்பராஜ் | 'டாக்சிக்' படத்தால் பின்வாங்கியதா 'ஜனநாயகன்' ? | பின்வாங்கியது ஜனநாயகன்... முந்துமா பராசக்தி | விஜய்க்கு ஆதரவாக முதல் குரல் கொடுத்த அருள்நிதி பட இயக்குனர் | டாக்சிக் படம் : யஷ் பிறந்தநாளில் இந்த மாதிரியா அறிமுக வீடியோ வெளியிடுவது.? |

பா விஜய் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், ஜீவா, ராஷி கண்ணா, அர்ஜுன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'அகத்தியா'. பிப்ரவரி 28ம் தேதி வெளியாக உள்ள இப்படத்தில் இளையராஜாவின் இசையில் வெளிவந்த 'மூடுபனி' படத்திலிருந்து 'என் இனிய பொன்நிலாவே' பாடலை ரீமிக்ஸ் செய்து வெளியிட்டிருந்தார்கள்.
அப்பாடலின் உரிமை தங்களிடம் உள்ளது, அனுமதியில்லாமல் பயன்படுத்தி இருக்கிறார்கள் என சரிகம ஆடியோ நிறுவனம் படத் தயாரிப்பாளரான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் மீது டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தது.
விசாரணையின் முடிவில் அப்பாடலை 'அகத்தியா' படத்தில் பயன்படுத்த நீதிமன்றத்தில் 30 லட்ச ரூபாய் செலுத்தினால் அனுமதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. பாடலுக்கான உரிமை சரிகம நிறுவனத்திடம் மட்டுமே உள்ளது. அதன் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
'அகத்தியா படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல், இப்பாடலுக்கான உரிமையை ஒரிஜனல் இசையமைப்பாளரான இளையராஜாவிடம் இருந்து வாங்கியதாக தெரிவித்திருந்தது. இரு தரப்பு ஆதாரங்களையும் ஆராய்ந்த நீதிமன்றம் மேற்கண்ட தீர்ப்பை அளித்துள்ளது.