சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
சின்னத்திரை மற்றும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் சாந்தினி தமிழரசன் தனது திருமண வாழ்க்கை குறித்தும் தனது கேரியர் குறித்தும் பேசியிருக்கிறார். 'பயர்' படத்தின் புரமோஷனின் போது அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'எங்களுக்கு 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதற்கு ஒன்றரை வருடம் முன்னதாகவே திருமணம் குறித்து எல்லாவற்றையும் பேசி வைத்திருந்தோம். அந்த நேரத்தில் தான் நான் நடித்த படங்கள் ரிலீஸானது. ஒருவேளை அதற்கு முன் ரிலீஸாகியிருந்தால் நான் சினிமாவில் அடுத்தக்கட்டத்திற்கு போவது பற்றி யோசித்திருப்பேன். திருமணத்தால் என்னுடைய கேரியர் பாதிக்கும் என்று நினைத்தேன். அதனால் எங்களது திருமணத்தை இன்செக்யூராக தான் பார்த்தேன். ஆனாலும் என்னுடைய திருமணத்தை நான் எஞ்சாய் செய்தேன்.
நந்தாவும் என் கேரியருக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணுவார். இன்ஸ்டாகிராமில் கிளாமராக போட்டோஷூட் நடத்துவேன். அதற்கெல்லாம் நந்தா கோபப்பட்டதே கிடையாது. நான் நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. அது எனக்கு வருத்தமாகவே இருக்கிறது. என்னதான் நான் திறமையை காட்ட நினைத்தாலும் அதற்கான சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை' என அந்த பேட்டியில் சாந்தினி பேசியுள்ளார்.