ஒரே நிறுவனத்திற்கு முதல் படத்தையும், கடைசி படத்தையும் இயக்கிய ஏ.சி.திருலோகச்சந்தர் | பிளாஷ்பேக்: அரியலூர் ரயில் விபத்து பின்னணியில் உருவான படம் | சென்னை சர்வதேச திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு: 'பறந்து போ' சிறந்த படம் | கூட்ட நெரிசலில் சிக்கிய நிதி அகர்வால் : போலீஸ் வழக்கு பதிவு | 275 படங்களைக் கடந்த 2025 : அடுத்த வருடம் 300ஐக் கடக்குமா ? | பராசக்தி அருளால் ‛பராசக்தி' கிடைத்தது : நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு | அஜித்தின் எதிர்கால ஆசை இதுதான்! - ஏ.எல்.விஜய் வெளியிட்ட தகவல் | 'வா வாத்தியார்' தடை விவகாரம்: உச்ச நீதிமன்றமும் ஸ்டுடியோ கிரீனுக்கு கொடுத்த அதிர்ச்சி! | 'அரசன்' படத்தில் இணைந்த ஆண்ட்ரியா! | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி : அறிவிப்பை வெளியிடாத அளவிற்கு சண்டையா? |

1946ம் ஆண்டில் பி.யு.சின்னப்பா ஹீரோவாக நடித்த படம் 'அர்த்தநாரி'. இது தமிழ்நாட்டின் புகழ்பெற்ற நாட்டுப்புறக் கதை ஒன்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட படம்.
காந்தார சாம்ராஜ்யத்தின் இளவரசிகள் எம்.எஸ்.சரோஜா மற்றும் எம்.வி.ராஜம்மா. துரதிர்ஷ்டத்தால் ராஜ்ஜியம் உட்பட அனைத்தையும் இழந்து கங்கை நதிக்கரையில் இருக்கும் ஆசிரமத்தில் வாழ்கின்றனர். சிறையில் இருக்கும் இளவரசன் விஜயவர்மனான சின்னப்பா, அங்கிருந்து தப்பித்து தனது ராஜ்ஜியத்தை மீட்கத் திட்டம் தீட்டுகிறார். அதோடு அவர் இளவரசிகளை காப்பாற்ற வேண்டிய நிலைக்கும் தள்ளப்படுகிறார். இரண்டு இளவரசிகளையும் ராஜ்யத்தையும் மீட்டாரா என்பது தான் படத்தின் கதை.
டி.ஆர்.ராமச்சந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம், காளி.என்.ரத்தினம் உட்பட பலர் நடித்தனர். பி.எஸ்.ராமையா திரைக்கதையை எழுதினார். மெட்ராஸ் யுனைட்டெட் ஆர்டிஸ்ட்ஸ் கார்பரேஷன் நிறுவனத்தின் இசைக் குழுவினர் இசையமைத்தனர். பாடல்களை பாபநாசம் சிவன், ராஜகோபால ஐயர் எழுதினர். சில பாடல்களைச் சின்னப்பா பாடினார்.
டி.ஆர்.ரகுநாத் இயக்கிய இதன் படப்பிடிப்பு, அடையாறில் அமைந்திருந்த பிரகதி ஸ்டூடியோவில் நடந்தது. தியாகராஜ பாகவதற்கும் பியு சின்னப்பாவுக்கும் கடுமையான போட்டி இருந்த காலத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. பியு சின்னப்பா படத்தின் தோல்வியை தியாகராஜ பாகவதர் ரசிகர்கள் கொண்டாடியது தனிக்கதை.