2026ல் ஓணம் பண்டிகைக்கு வெளியாகும் நிவின் பாலி, மமிதா பைஜூ படம் | மீண்டும் தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் ரோஜா | சம்பளத்தை உயர்த்தினாரா ராஷ்மிகா மந்தனா | விஷால், சுந்தர். சி கூட்டணியின் 3வது படம்: கயாடு லோஹர் ஹீரோயின்? | உண்மையில் ஜனநாயகன், 'பகவந்த் கேசரி' ரீமேக்கா? | சரவண விக்ரம் ஹீரோவான முதல் படத்திலேயே ஹாட் முத்தக்காட்சிகள் | பிரபாஸ் நடிக்கும் 'தி ராஜா சாப்' என்ன மாதிரியான கதை? | ஐசியூவில் இயக்குனர் பாரதிராஜா: இப்போது அவர் உடல் எப்படி இருக்கிறது? | 2026 ஆரம்பமே அமர்க்களம் : முதல் வாரத்தில் 6 படங்கள் ரிலீஸ் | குழந்தைகளுக்கான அனிமேஷன் படம் 'கிகி & கொகொ' |

பாரதிராஜாவின் இயக்கத்தில் 1983ம் ஆண்டு வெளியாகி வெள்ளி விழா கண்ட படம் 'மண்வாசனை'. மதுரையில் மட்டும் ஒரு வருடம் ஓடியது. காரணம் படம் மதுரை மண் வாசனையை பேசியது. இந்த படத்தில் நடிப்பதற்காக மதுரை கோவிலில் வளையல்கடை வைத்திருந்த பாண்டியனை அழைத்து வந்தார். கேரளாவில் இருந்து ரேவதியை அழைத்து வந்தார் பாரதிராஜா. பாண்டியனுக்கு முழுமையான நடிப்பு பயிற்சி கொடுத்து நடிக்க வைத்தார்.
ரேவதியை தேனி பகுதி பெண்களுடன் பழக வைத்து அவர்களின் மேனரிசத்தை கற்றுக் கொள்ள வைத்தார். படத்தின் பல காட்சிகளில் அவர் வெட்கப்பட வேண்டும். குறிப்பாக 'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு' பாடலில் அவர் வெட்கப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
கிராமங்களில் பெண்கள் பெரியமனுஷியாவது மிகப்பெரிய சடங்கு. படத்தில் முத்துப்பேச்சி (ரேவதி) பெரியமனுஷி ஆகிவிடுவாள். முறைமாமன் வீரணந்தான்(பாண்டியன்) பச்சை ஓலையில் குடிசை போடவேண்டும். அப்போது ஏற்படும் பார்வை, மெல்லியதாக எட்டிப் பார்க்கும் காதல். பிறகு பள்ளத்தில் விழுவார் ரேவதி. அவரை தாங்கி பிடிப்பார் பாண்டியன் தெடர்ந்து 'பொத்தி வச்ச மல்லிகை மொட்டு' பாடல் வரும்.
முறைப்படி பரதநாட்டியம் கற்றிருந்த ரேவதிக்கு வெட்கம் பெரிய விஷயம் இல்லை. ஆனால் கேமரா முன் அவருக்கு வெட்கம் வரவில்லை. அதோடு பாண்டியனை கண்டாலே அவருக்கு சிரிப்புதான் வந்தது. இதனால் பாரதிராஜா ஒரு யுக்தியை கையாண்டார். ரேவதி வெட்கப்பட வேண்டிய காட்சியில் பின்னால் நின்று ஒருவர் கேமராவிற்கு தெரியாமல் அவர் இடுப்பில் ஒரு நீளமான புல் கொண்டு உரசுவார், உடனே அந்த கூச்சத்தால் வெட்கப்படுவார் ரேவதி. இப்படித்தான் படத்தில் வரும் ரேவதியின் அனைத்து வெட்கப்படும் காட்சிகளும் படமானது. ரேவதியின் அந்த வெட்கம்தான் ரசிகர்களை தியேட்டருக்கு அள்ளி வந்தது.