பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தமிழ்த் திரையுலகத்தில் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகத்திலும் பல மொழிகளில் இசையமைத்து மக்களின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராக இருப்பவர் இளையராஜா. சமீபத்தில் லண்டன் சென்று சிம்பொனி இசையமைத்து இசையுலகை திரும்பிப் பார்க்க வைத்தார்.
அவரது சாதனையை பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட எண்ணற்ற தலைவர்கள், திரையுலகினர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். சில தினங்களுக்கு முன்பு டில்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார் இளையராஜா.
அவருக்கு இந்திய அரசின் உயரிய விருதான 'பாரத ரத்னா' விருது வழங்க பரிசீலனையில் உள்ளதாக டில்லி அரசியல் வட்டாரங்களில் பரவியுள்ளதாகத் தகவல். தற்போது பாரதிய ஜனதா கட்சியின் ராஜ்ய சபா உறுப்பினராகவும் இருக்கிறார் இளையராஜா.
அடுத்த வருடம் தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் வர உள்ள நிலையில் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கினால், தமிழ் சினிமா ரசிகர்களின் மனதிலும் இடம் பிடிக்க முடியும் என்றும் சொல்லப்படுகிறது.
இளையராஜா பத்ம பூஷன், பத்ம விபூஷன் ஆகிய விருதுகளை ஏற்கெனவே பெற்றுள்ளார். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென பல வருடங்களாகவே ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் சினிமா துறையிலும் தொடர்புடையவர்களில் இதுவரையில் எம்ஜிஆர், எம்எஸ் சுப்புலட்சுமி, ஆகியோர் பாரத ரத்னா விருது பெற்றுள்ளனர்.