சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் | கிங்டம் படத்திற்கு எதிர்ப்பு : நா.த.க.,வினர் முற்றுகை, கைது | மலையாளத்தில் அறிமுகமான கதிர் | பிளாஷ்பேக்: அம்பிகாவுடன் நெருக்கமாக நடித்த சிவகுமார் | தமிழில் வாய்ப்பு தேடும் ஐஸ்வர்யா மேனன் | பிளாஷ்பேக்: தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் | எனது பாடல்களை அனிருத் பாடல் என்று நினைக்கிறார்கள்: சாம் சி.எஸ் வருத்தம் | பிளாஷ்பேக்: பலாத்கார காட்சியில் பாடலை வைத்து புதுமை படைத்த இயக்குநர் கே பாலசந்தர் | தவறான வீடியோ பதிவுக்கு ஆச்சரியப்பட்ட அல்லு அர்ஜுன் |
ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா மிகவும் புகழ்பெற்றதாகும். இங்கு ஏராளமான படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. தோட்டக்கலை பூங்காக்களில் கட்டணம் அடிப்படையில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு சென்னையில் உள்ள தோட்டக்கலைத்துறை இயக்குனரிடம் அனுமதி பெற வேண்டும். ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்காக்களில் ஒரு நாள் படப்பிடிப்பு கட்டணமாக 50 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஆனாலும் ஒவ்வொரு ஆண்டு கோடை விடுமுறையின் போது மக்கள் அதிகமாக இந்த பூங்காக்களுக்கு வருவதால் அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக அந்த காலகட்டத்தில் படப்பிடிப்புகளுக்கு தடைவிதிக்கப்படும்.
அந்த வகையில் இன்று (ஏப் 1)) முதல் ஜூன் 30ம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு தாவரவியல் பூங்கா, சிம்ஸ் பூங்கா உள்பட நீலகிரியில் உள்ள 8 தோட்டக்கலை பூங்காக்களிலும் சினிமா படப்பிடிப்புக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.