பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் ஷாலினி பாண்டே. தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது தமிழில் சிறிய இடைவெளிக்குப் பிறகு தனுஷின் 'இட்லி கடை' படத்தில் நடித்து வருகிறார்.
இப்போது ஷாலினி பாண்டே அளித்த பேட்டி ஒன்றில் அவர் சந்தித்த கசப்பான அனுபவம் குறித்து அவர் கூறியதாவது, "அப்போது எனக்கு 22 வயது. நான் தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டு இருந்தேன். கேரவனில் நான் உடை மாற்றிக் கொண்டு இருக்கும்போது, அந்த படத்தின் இயக்குநர் கேரவன் கதவை தட்டாமல் உள்ளே நுழைந்து விட்டார். அதிர்ச்சியடைந்த நான் கத்தி திட்டி, இயக்குநரை அனுப்பிவிட்டேன். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தவர்கள், இந்த விஷயத்தை பெரிதாக்க வேண்டாம் என்றார்கள். அப்போது எனக்கு இந்த பிரச்னையை எப்படி கையாள வேண்டும் எனத் தெரியவில்லை என்பதால் அமைதியாக இருந்துவிட்டேன்" என தெரிவித்துள்ளார். ஆனால், அந்த இயக்குனரின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.