ரசிகர்களின் அன்பை சுயலாபத்திற்காக பயன்படுத்த மாட்டேன்: அஜித்குமார் | ஏஐ.,யின் உதவியுடன் இசையமைத்த அனிருத்! | மகேஷ்பாபுவின் 50வது பிறந்தநாளில் அடுத்த வாரிசுக்கு விழா எடுக்கும் பெங்களூரு ரசிகர்கள்! | சினிமா துறையில் 33 ஆண்டுகளை நிறைவு செய்த அஜித்குமார்! இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட பதிவு! | ரஜினியின் ‛கூலி' படம் 100 பாட்ஷாவுக்கு சமம் என்கிறார் நாகார்ஜுனா! | எம்.எஸ். பாஸ்கர், பிரான்க் ஸ்டார் கூட்டணியில் ‛கிராண்ட் பாதர்'! | தேசிய விருதுகள் எப்படி வழங்கப்படுகிறது? ஜூரிகள் குழுவில் இடம்பெற்ற இயக்குனர் கவுரவ் பேட்டி | நடிகர் மதன் பாப் உடல் தகனம் | நான்காவது முறையாக இணையும் அஜித், அனிருத் கூட்டணி! | ‛கிஸ்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்து புதிய தகவல் இதோ! |
'கேஜிஎப் 1,2' படங்களின் மூலம் கன்னடத் திரையுலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குனர் பிரசாந்த் நீல். 'கேஜிஎப் 2' படம் 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து பெரும் சாதனை படைத்தது. அடுத்து 'கேஜிஎப் 3' எப்போது வரும் என்று ரசிகர்களைக் கேட்க வைத்தது.
ஆனால், அதற்கடுத்து பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடித்த 'சலார்' படத்தை இயக்கினார் நீல். அப்படம் 2023ல் வெளிவந்தது. 'கேஜிஎப் 2' அளவிலான வரவேற்பையும், வசூலையும் தரவில்லை என்றாலும் அதில் பாதியளவாவது கிடைத்தது.
அப்படம் வெளிவந்த பின்பு 'சலார் 2' படம் ஆரம்பமாகும் என்று சொல்லப்பட்டது. 2024ன் துவக்கத்திலேயே அதற்கான ஸ்கிரிப்ட் தயாராக இருப்பதாகத் தயாரிப்பாளர் சொன்னார். 2026ம் ஆண்டு 'சலார் 2' வெளியாகும் என்று கடந்த வருடம் நவம்பர் மாதம் அறிவித்தார்கள். ஒரு கட்டப் படப்பிடிப்பு நடந்து அதன்பின் நடக்கவில்லை.
இந்நிலையில் ஜுனியர் என்டிஆர் நாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஆரம்பித்தார் பிரசாந்த் நீல். முதலில் ஜுனியர் என்டிஆர் இல்லாத காட்சிகள் படமாக்கப்பட்டன. நேற்று முதல் இதன் படப்பிடிப்பில் ஜுனியர் என்டிஆர் இணைந்தார். நேற்று கர்நாடகாவில் படப்பிடிப்பு ஆரம்பமாகி உள்ளது.
2026ம் ஆண்டு இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகத் தகவல். அப்படியென்றால் 'சலார் 2' அறிவித்தபடி வராதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஜுனியர் என்டிஆர் படத்தை முடித்த பிறகே நீல் அடுத்து எந்தப் படத்தை இயக்குவார் என்பது தெரிய வரும் என்கிறார்கள். அதுவரை பிரபாஸ், யஷ் ரசிகர்கள் காத்திருக்கத்தான் வேண்டும்.