பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

'கூலி' படத்தை முடித்துவிட்ட ரஜினிகாந்த், தற்போது நெல்சன் இயக்கும் 'ஜெயிலர்-2' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருடன் முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் பஹத் பாசில் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவையில் உள்ள ஆணைக்கட்டி, மாங்கரை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆணைக்கட்டியில் இருந்து மாங்கரைக்கு ரஜினிகாந்த் காரில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியில் அமைந்துள்ள மாதேஸ்வரர் கோயிலில் இறங்கி சாமி தரிசனம் செய்திருக்கிறார். அது குறித்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், கோயில் வாசலில் ரஜினியின் கார் வந்து நின்றதும், பூசாரி ஓடிவந்து அவரை வரவேற்க, ரஜினி கோயிலுக்குள் சென்றதும் பூஜை தீபாராதனை நடத்தப்பட்டு சாமி தரிசனம் செய்கிறார். அதையடுத்து அவருக்கு பூசாரி விபூதி பூசி விடும் காட்சி அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது.