‛கில்லர்' முதல்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு ‛ஜெயிலர்-2'வில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | காரில் கோளாறு: ஷாரூக்கான், தீபிகா படுகோனே மீது வழக்கு | ‛வார் - 2' படம் தோல்வி அடைந்ததால் ஜூனியர் என்டிஆரின் அடுத்த படத்தை கைவிட்ட நிறுவனம்! | எனது சொகுசு பங்களா வீடியோவை உடனே நீக்குங்கள்! - ஆலியா பட் வைத்த ஆவேச கோரிக்கை | 23 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் ‛ரன்' | சிவகார்த்திகேயனுக்கு போட்டியா : ‛கேபிஒய்' பாலா பதில் | பிளாஷ்பேக்: திகைக்க வைக்கும் 'த்ரில்லர்' திரைப்படத்தின் நாயகனாக எம் என் நம்பியார் நடித்த “திகம்பர சாமியார்” | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் ‛பர்ஸ்ட் பன்ச்' எப்படி இருக்கு? | மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது! | ஷாலின் சோயாவின் இயக்குனர் ஆசை! |
தமிழ் சினிமாவில் வடிவேலு, பார்த்திபன் கூட்டணிக்கு வரவேற்பு உண்டு. இருவரும் இணைந்தால் வெடி சிரிப்புதான். அதேபோல், வடிவேலு, பிரபுதேவா இணைந்து நடித்த படங்களும் ஒரு காலத்தில் பேசப்பட்டன. குறிப்பாக, ‛காதலன், மனதை திருடிவிட்டாய், ராசையா, லவ்பேர்ட்ஸ், எங்கள் அண்ணா' படங்களின் காமெடி இன்றும் பிரபலம். இப்போது கண்ணன் ரவியின் தயாரிப்பில், பிரபுதேவா, வடிவேலு 25 ஆண்டுகளுக்குபின் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை சாம் இயக்குகிறார்.
முன்போல இந்த கூட்டணி வெற்றி பெறுமா என்று விசாரித்தால், கடந்த சில ஆண்டுகளாக பிரபுதேவா ஹீரோவாக நடித்த பல படங்கள் ஓடவில்லை. அவர் நடித்த சில படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருக்கின்றன. வடிவேலுவும் ரீ என்ட்ரியில் ஜெயிக்கவில்லை. அந்த காலத்தில் நடிகர்கள் மட்டுமல்ல, காமெடி டிராக் எழுத பல திறமைசாலி எழுத்தாளர்கள் இருந்தார்கள். இப்போது காமெடியை இயக்குனர்களே எழுதுவதால் அது வொர்க் அவுட் ஆவதில்லை. வடிவேலுவும் இயக்குனர் சுதந்திரத்தில் நிறைய தலையிடுகிறார். நிறைய டயலாக்குகளை மாற்ற சொல்கிறார் என கூறப்படுகிறது. பிரபுதேவாவுக்கும் வயதாகிவிட்டது. ஆகவே படம் வந்து, காமெடி ஹிட்டானால்தான் எதுவும் பேச முடியும் என்கிறார்கள்.