தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

ரிஷப் ஷெட்டி இயக்கம், நடிப்பில் அக்டோபர் 2ம் தேதி வெளியாக உள்ள படம் 'காந்தாரா சாப்டர் 1'. இப்படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடைபெற்றது. அதில் ஜூனியர் என்டிஆர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் ஜூனியர் என்டிஆர் பேசுகையில், “என் தாய் வழி மூதாதையர்கள் கர்நாடகாவின் குண்டாப்பூராவைச் சேர்ந்தவர்கள். என் பாட்டி எனக்கு 'குல்கா தேவா' மற்றும் 'பஞ்ஜுர்லி' பற்றிய கதைகளைச் சொல்வார். நான் அந்தக் கதைகளை கற்பனை செய்து கனவு காண்பேன், அது எப்படி இருக்கும் என்று ஆச்சரியப்படுவேன். ரிஷப் ஷெட்டி காந்தாரா மூலம் பெரிய திரையில் என் கனவை நனவாக்கியுள்ளார்.
ரிஷப்பால், உடுப்பி கிருஷ்ணா கோயிலுக்குச் சென்று என் தாயின் விருப்பத்தை நிறைவேற்ற முடிந்தது. நீரில் இருக்கும் ஒரு பழைய கோயிலில் படப்பிடிப்பு செய்ய அவர்கள் போடும் கடின உழைப்பைப் பார்த்தேன். நான் ஆச்சரியப்பட்டேன். ரிஷப் ஷெட்டி சினிமாவின் அனைத்து 24 கைவினைகளிலும் கை தேர்ந்தவர். 'காந்தாரா சாப்டர் 1' இந்திய சினிமாவில் வரலாற்று பிளாக்பஸ்டராக இருக்க வேண்டும்” என்றார்.