ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

இயக்குனர் செல்வராகவன் சமீப காலமாக டைரக்ஷனை ஒதுக்கி வைத்து விட்டு முழு நேர நடிகராக மாறியுள்ளார். ஆனாலும் அவர் பல வருடங்களுக்கு முன்பு தனுஷை வைத்து இயக்கிய 'புதுப்பேட்டை' மற்றும் கார்த்தியை வைத்து இயக்கிய 'ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய இரண்டு படங்களுக்கும் இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று ரசிகர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர். தனக்கும் அப்படி ஒரு எண்ணம் இருப்பதாகவும் கூறி வந்தார் செல்வராகவன்.
ஆனால் இன்னும் அதற்கான எழுத்து வடிவம் முழுமை பெறவில்லை என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள செல்வராகவன், இந்தப் படங்களின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் மற்றும் கார்த்தி நடிப்பார்களா என்கிற கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறும்போது, “கிட்டதட்ட 3 வருடங்களுக்கு தனுஷ் மற்றும் கார்த்தி ஆகியோரின் கால்ஷீட் கிடைக்காது. இன்னும் இந்த படங்களின் கதையையும் நான் முழுமையாக முடிக்கவில்லை. அதே சமயம் இந்த படங்களின் இறுதிக்காட்சிகளில் நான் மற்ற நடிகர்களை வைத்து முடித்திருப்பதால் தனுஷ், கார்த்தி இல்லாமலேயே இந்த படங்களின் இரண்டாம் பாகத்தை என்னால் எடுக்க முடியும்” என்றும் கூறியுள்ளார்.




