பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சர்ச்சைக்குரிய கருத்துகள், காட்சிகளை கொண்ட படங்கள் பல எதிர்ப்புகளை சந்தித்துள்ளது. சில படங்கள் வெளிவராமலேயே போயிருக்கிறது. அப்படியான ஒரு படம் 1954ம் ஆண்டு வெளிவந்த 'சொர்க்கவாசல்'.
அப்போது அரசியலில் தலைவராக உருவாகி வந்த அண்ணாதுரை சொர்க்கவாசல் என்ற ஒரு நாடகத்தை எழுதி, அதனை அவரது கட்சியினர் நடத்தி வந்தனர். இந்த நாடகம் நல்ல வரவேற்பை பெறவே பின்னர் அது திரைப்படமானது.
கே.ஆர்.ராமசாமி, பத்மினி, எஸ்.எஸ்.ராஜேந்திரன், அஞ்சலிதேவி, வீரப்பா, ஆர்.பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் நடித்த இந்த படத்தை, ஏ.கலசலிங்கம் இயக்கினார். விஸ்வநாதன்- ராமமூர்த்தி இசை அமைத்தனர்.
இறந்தவர்களுக்கு சொர்க்கத்தை காட்டுகிறோம் என்று ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் பூஜைகள் செய்து மக்களையும், மன்னர்களையும் ஏமாற்றுவது போன்று இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டிருந்தது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் கடவுள் நம்பிக்கையாளர்களை கிண்டல் செய்தது.
இதனால் படத்திற்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட சமுதாயத்தினர் படத்திற்கு சான்றிதழ் தரக்கூடாது என்று தணிக்கை குழுவிடம் மனு அளித்தனர். இதை தொடர்ந்து படத்தில் இருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டும், பாடல்களில் சில வரிகளை நீக்கியும் சான்றிதழ் வழங்கப்பட்டது.