பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

புரோட்டா நடிகர், 'ஹீரோ'வாகிவிட்ட போதும் அவருக்கென்று இன்னமும் ஒரு ரசிகர் வட்டம் உருவாகவில்லை. அதன் காரணமாகவே தன் படங்களுக்கு ஒரு, 'ஓப்பனிங்'கை ஏற்படுத்த வேண்டும் என்றால், அதற்கு ரசிகர் கூட்டம் தேவை என்பதால் தற்போது சில முக்கிய மேல் தட்டு நடிகர்களுடன் சந்திப்பு நடத்தி, அவர்களின் ரசிகர்களை தன் பக்கம் திருப்பும் வேலைகளில் அவர் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், சமீபத்தில், தல நடிகரை தான் சந்தித்ததாக ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்திய புரோட்டா நடிகர், அடுத்தபடியாக இன்னும் சில மேல் தட்டு நடிகர்களையும் குறி வைத்து வருகிறார். ஆனால், நடிகரின் இந்த திட்டத்தை, 'நோட்' பண்ணி விட்ட, அமரன் நடிகர், உஷாராகி விட்டார். 'இப்பதான் நானே வளர்ந்து வருகிறேன்; எனக்கான, ரசிகர் கூட்டமும் உருவாகி வருகிறது. இந்த நேரத்தில் என் ரசிகர்களை பங்கு போட திட்டம் போட வேண்டாம்...' என்று, புரோட்டா நடிகருக்கு, 'ஷாக்' கொடுத்து விட்டார்.