Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன்

13 டிச, 2025 - 05:15 IST
எழுத்தின் அளவு:
Divorce-rumours-Abhishek-Bachchan-expresses-anger
Advertisement

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யா ராய் தம்பதியினர் குறித்து விவாகரத்து வதந்திகள் தொடர்ந்து ஊடகங்களில் வெளியாகி வருகிறது. அவர்கள் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியே பிரிந்து வாழ்ந்து வருவதாக செய்தி வெளியிட்டு வருகிறார்கள். அது குறித்து தான் அளித்த ஒரு பேட்டியில் தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் அபிஷேக் பச்சன்.

அவர் கூறுகையில், நானும், ஐஸ்வர்யாவும் காதலித்து வந்தபோது உங்களது திருமணம் எப்போது என்று ஊடகங்கள் எங்களிடத்தில் கேள்வி கேட்டார்கள். ஆனால் திருமணத்திற்கு பிறகு இப்போது விவாகரத்து செய்து விட்டதாக கூறுகிறார்கள். இது முட்டாள்தனமானது. எனக்கும், ஐஸ்வர்யாராய்க்கும் இடையில் எந்தவித பிரச்சனை இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறோம். இந்த விஷயத்திற்கு இத்தோடு ஊடகங்கள் முற்றுப்புள்ளி வைத்து விடுங்கள் என்று தனது கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் அபிஷேக்பச்சன்.

மேலும், இது போன்ற வதந்திகள் குறித்து எங்கள் மகள் ஆரத்யாவுக்கு எதுவும் தெரியாது. தெரிந்தாலும் அதை கண்டுகொள்ளாத அளவுக்கு அவரை ஐஸ்வர்யா புத்திசாலியாக வளர்த்திருக்கிறார். மீடியாக்களில் வெளியாகும் வதந்திகளை நம்ப கூடாது என்று அவருக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்துள்ளோம். அதனால் சமூக வலைதளங்களில் வெளியாகும் இதுபோன்ற வதந்திகளை அவர் ஒருபோதும் நம்ப மாட்டார்.

நாங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் போது இதுபோன்ற பொய்யான செய்திகளை மீடியாக்கள் திட்டமிட்டே பரப்பினால் அதைப்பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால், கணவனும் , மனைவியும் சந்தோஷமாக வாழ்ந்து வரும் போது இதுபோன்ற செய்தி வெளியிடுவது தவறான செயல். அதனால் இதை புரிந்து கொண்டு ஊடகங்கள் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுங்கள் என்றும் அபிஷேக் பச்சன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்திற்கு தடைபாகிஸ்தானுக்கு எதிரான கதையா? ... 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in