டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

தெலுங்குத் திரையுலகத்தின் நடிகர்களில் ஒருவர் சிவாஜி. முரளிகாந்த் தேவசோத் இயக்கத்தில் சிவாஜி, நவதீப், நந்து பிந்து மாதவி, ரவி கிருஷ்ணா மற்றும் பலர் நடித்துள்ள தெலுங்குப் படமான 'தண்டோரா' படம் இந்த வாரம் டிசம்பர் 25ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வில் நடிகைகள் அணியும் ஆடைகள் குறித்து சிவாஜி பேசிய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
“தெலுங்கு சினிமாவில் கதாநாயகிகள் திரைக்கு வெளியே அணியும் ஆடைகள் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுகிறது. உடல் பகுதிகளை வெளிப்படுத்தும் விதமாக ஆடைகளை அணிவது அழகை வரையறுக்காது. பெண்கள் புடவை மற்றும் பாரம்பரிய ஆடைகளை அணிய வேண்டும். பெண்களிடம் மக்கள் தாய்மையைப் பார்க்கிறார்கள். புடவை அணிந்த பெண்கள் இயற்கையின் அழகை அதிகரிக்கின்றனர்.
சாவித்ரி மற்றும் சவுந்தர்யா போன்ற புகழ் பெற்ற நடிகைகள் பாரம்பரிய புடவைகளை அணிந்தபடி தெலுங்கு சினிமாவில் தாக்கத்தை உருவாக்கினார்கள். தற்போதைய தலைமுறையில் ரஷ்மிகா மந்தனா கூட கிளாமரை வெளிப்படுத்தாத ஆடைகளை அணிந்து வெற்றி பெற்றுள்ளார். நான் பேசுவது சிலரது மனதை புண்படுத்தலாம். ஆனால், அத்தகைய மதிப்புகளை பின்பற்றுவது சமூகத்திற்கு நல்லது” என்று அவர் பேசியுள்ளார். அவர் பேசும்போது சில அநாகரிகமான வார்த்தைகளையும் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் அணியும் ஆடை குறித்து யார் பேசினாலும் அது சர்ச்சையாகிறது. சிவாஜி அவருடைய பேச்சில் சிலரது மனது புண்படலாம் என்று குறிப்பிட்ட பிறகும், அவரது கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக அவர் பேசிய ஆடை விஷயத்தை விட அவர் பேசிய தவறான வார்த்தைகளை குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.