Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தணிக்கையில் பிரச்னை... மாற்றம் வேண்டும் என்கிறார் கமல்

10 ஜன, 2026 - 04:00 IST
எழுத்தின் அளவு:
Kamal-says-censorship-is-a-problem...-change-is-needed
Advertisement

சினிமா படம் எடுப்பவர்களுக்கும், அதை தணிக்கை செய்யும் தணிக்கை வாரியத்திற்கும் அவ்வப்போது சர்ச்சைகள் எழும். அப்படித்தான் தற்போது ஜனநாயகன் படத்தை சுற்றி எழுந்த தணிக்கை தொடர்பான பிரச்னை கோர்ட் வரை சென்றிருக்கிறது. இந்த விவகாரத்தில் திரைக்கலைஞர்கள் பலரும் விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல், தணிக்கை வாரியத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஒரு எம்பியாக அவர் வெளியிட்ட அறிக்கை : கலைக்காக, கலைஞர்களுக்காக, அரசியலமைப்புக்காக என ஆரம்பித்துள்ள கமல், தொடர்ந்து ‛‛இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் கருத்து சுதந்திரத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. அது பகுத்தறிவால் வழி நடத்தப்படுகிறது, ஒருபோதும் முடக்கப்படாது. இது ஒரு கலைஞனை மட்டுமல்ல, கலை மற்றும் கலைஞர்களுக்கு நாம் வழங்கும் இடத்தை பிரதிபலிக்கிறது.

திரைப்படம் ஒரு தனிநபரின் உழைப்பு மட்டுமல்ல, அது எழுத்தாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் சிறு வணிகங்கள் உள்ளிட்ட ஒரு சூழலமைப்பின் கூட்டு முயற்சியாகும். இவர்களின் வாழ்வாதாரம் நியாயமான மற்றும் சரியான நேரத்தில் நடைபெறும் செயல்முறையை சார்ந்துள்ளது.

தெளிவு இல்லாதபோது படைப்பாற்றல் தடைபடுகிறது. பொருளாதார செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. பொது நம்பிக்கை பலவீனமடைகிறது. தமிழ்நாட்டு மக்களும் இந்தியாவின் திரைப்பட ரசிகர்களும் கலைக்கு ஆர்வம், பார்வைத்திறன் மற்றும் முதிர்ச்சியை கொண்டு வருகின்றனர். அவர்கள் வெளிப்படைத்தன்மையையும் மரியாதையையும் தகுதியுடையவர்கள்.

தற்போது நமக்கு தேவையானது சான்றிதழ் வழங்கும் செயல்முறையை கொள்கை ரீதியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். தணிக்கைக்கான காலக்கெடுவை வரையறுத்தல், வெளிப்படையான மதிப்பீடு மற்றும் பரிந்துரைக்கப்படும் ஒவ்வொரு கட் அல்லது மாற்றத்திற்கும் எழுத்துப்பூர்வமான, தர்க்கரீதியான காரணங்களை முன்வைத்தல் ஆகியவை அவசியமாகும்.

ஒட்டுமொத்த திரைத்துறையும் ஒன்றாக இணைந்து அரசுடன் அர்த்தமுள்ள, ஆக்கபூர்வமான உரையாடலில் ஈடுபடும் தருணமும் இதுதான். இதுபோன்ற சீர்திருத்தங்கள் படைப்பு சுதந்திரத்தை பாதுகாக்கும், அரசியலமைப்பு மதிப்புகளை உயர்த்தும். மேலும், கலைஞர்கள் மற்றும் மக்களின் மீது நம்பிக்கை வைப்பதன் மூலம் இந்தியாவின் ஜனநாயக நிறுவனங்களை இது வலுப்படுத்தும்.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கருப்பான பெண்ணாக நடிக்கவும் கலரான பெண்ணையே தேர்வு செய்கிறார்கள்: பிரானா வருத்தம்கருப்பான பெண்ணாக நடிக்கவும் கலரான ... தி ராஜா சாப் : முதல் நாள் வசூல் ரூ.112 கோடி தி ராஜா சாப் : முதல் நாள் வசூல் ரூ.112 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in