இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் தணிக்கை சான்றிதழ் காரணமாக நீதிமன்ற வழக்கு விசாரணையில் உள்ளது. தனி நீதிபதி முன்பாக வழக்கு மீண்டும் எப்போது விசாரணைக்கு வரும் என காத்திருக்கின்றனர்.
இதனிடையே, ஆங்கில செய்தி சேனல் ஒன்றிற்கு விஜய் பேட்டியளித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. படத்தின் தாமதம் குறித்த கேள்விக்கு விஜய் பதிலளிக்கையில் தன்னுடைய அரசியல் நுழைவு காரணமாக படம் சிக்கலை சந்திப்பதாகவும், தயாரிப்பாளருக்காக வருந்துவதாகவும் தெரிவித்துள்ளாராம். இப்படி ஒன்று நடக்கும் என்று யூகித்து தாம் ஏற்கெனேவ மனரீதியாக தயாராக இருந்ததாகவும் கூறினாராம்.
ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் வழக்கை வாபஸ் பெறும் எண்ணத்தில் உள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகி உள்ளன. அடுத்த வாரம் தனி நீதிபதி முன்பு வழக்கு விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது. அதே சமயம், தணிக்கை வாரியம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனால், என்ன நடக்கும் என்பது அடுத்த வாரம் தான் தெரிய வரும்.




