Advertisement

சிறப்புச்செய்திகள்

'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் | 50 லட்சம் சம்பளத்தை விட்டு இலங்கை படத்தில் நடித்த டி.ஜே .பானு | கார்த்திக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி? |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: எக்ஸ்பிரஸ் கவிஞர்

19 பிப், 2026 - 10:58 IST
எழுத்தின் அளவு:
Flashback-Express-Poet
Advertisement


மெட்டை கேட்ட அடுத்த நிமிடமே பாடல் எழுதக்கூடியவர் என்று கவியரசர் கண்ணதாசனை சொல்வார்கள், அடுத்த நிமிடமே மெட்டுக்கு மூன்று விதமான பாடல் வரிகளை சொன்னவர் தஞ்சை ராமய்யா தாஸ். அவரை எம்ஜிஆர் 'எக்ஸ்பிரஸ் கவிஞர்' என்று செல்லமாக அழைத்தார்.

அதேபோல நாடங்களுக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதியவர்களை 'வாத்தியார்' என்று அழைப்பது அக்கால வழக்கம். தஞ்சை ராமய்யா தாஸ் தான் மட்டும் கதை, திரைக்கதை, வசனம் எழுதாமல் மற்றவர்களுக்கும் அதுகுறித்த பயிற்சி அளித்தார். அதனால் அவர் 'வாத்தியார்களின் வாத்தியார்' என்றும் அழைக்கப்பட்டார்.

தஞ்சை, மானம்பூச்சாவடியில் புனித பீட்டர் பள்ளியில் படித்து, கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் புலவர் பட்டமும் பெற்று தஞ்சை கீழவாசல் பள்ளியிலேயே ஆசிரியராகவும் பணியாற்றினார். பின்னர் "சுதர்சன கான சபா' நாடக நிறுவனத்தில் நாடக வாத்தியாராகச் சேர்ந்தார். பிறகு, "ஜெயலட்சுமி கான சபா' என்று தானே ஒரு நாடகக் குழுவை ஏற்படுத்தி, 'மச்சரேகை, துருவன், கம்பர், விதியின் போக்கு, வள்ளி திருமணம், அல்லி அர்ஜுனா, பவளக்கொடி, பகடை பன்னிரண்டு' ஆகிய நாடகங்களை நடத்தி வந்தார்.

"ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி' என்ற படத்தின் மூலம் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமானார். "பாதாள பைரவி' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதினார். 'மாயா பஜார், மிஸ்ஸியம்மா, கடன் வாங்கிக் கல்யாணம், மனிதன் மாறவில்லை' ஆகிய படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதினார்.

83 படங்களில் சுமார் 532 பாடல்களை எழுதியதோடு, 25 படங்களுக்குக் கதை வசனமும், 10 படங்களுக்குத் திரைக்கதையும் எழுதினார். அவர் நடத்திய நாடங்கள் பின்னாளில் திரைப்படங்களானது.1965ம் ஆண்டு காலமானார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
'அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்' : இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத்'அல்புகர்கி ரெக்கார்ட்ஸ்' : இசை ... 4 புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் காந்தி கிருஷ்ணா 4 புதுமுகங்களை அறிமுகப்படுத்தும் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Seyon
    • சேயோன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • இயக்குனர் :சிவகுமார் முருகேசன்
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2026 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in | Sitemap