ரஜினிகாந்த், சிபி படத்தில் இணையும் பசில் ஜோசப், பிரியங்கா மோகன் | 'தாய் கிழவி' பார்த்துவிட்டு அக்கா ராதிகாவை கட்டிபிடித்து அழுதது ஏன்? நடிகை நிரோஷா | அது போன மாசம், இது இந்த மாசம்…விஜய் ரசிகர்களின் 'உருட்டு' | 'சரோஜா' படத்தில் தவறு… இப்போது கண்டுபிடித்த ரசிகர் | கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி | மறு உத்தரவு வரும் வரை கேரளா ஸ்டோரி 2 ரிலீஸை நிறுத்திவைத்த கேரள உயர்நீதிமன்றம் | கேரளாவில் முதன்முறையாக பஞ்சாயத்து நிர்வாகத்தால் கட்டப்பட்ட தியேட்டர் : பாவனா திறந்து வைக்கிறார் | தடை செய்யப்பட்ட துரந்தர் படம் பார்ப்பதற்காகவே இந்தியா வந்தார்கள் : ரசிகர்கள் மீது மாதவன் நம்பிக்கை | 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் நாயகியாக நடிக்கும் மாதுரி ஜெயின் | அனுபமாவை மட்டன் சாப்பிடுவதையே நிறுத்த வைத்த அதிர்ச்சி சம்பவம் |

இன்றைய காலகட்டத்தில் நடிகர்கள் சினிமா வருமானத்தை மட்டும் நம்பியிராமல் வேறு தொழிலும் செய்கிறார்கள். அதில் ஒன்று ஓட்டல் நடத்துவது, ஆர்யாவும், சூரியும் தற்போது ஓட்டல்களை நடத்தி வருகிறார்கள். கருணாஸ் சில காலம் நடத்தினார். ஆனால் முதன் முதலாக ஓட்டல் நடத்திய நடிகர் ஏ.கருணாநிதி.
அந்தக் காலத்தில் நடிகர்கள் அதிகம் பணம் சம்பாதித்தால் தியேட்டர் கட்டுவார்கள், இல்லாவிட்டால் படம் தயாரிப்பார்கள். ஆனால் முதன் முதலில் ஓட்டல் வைத்தவர் கருணாநிதி. சென்னை தியாகராய நகரில் 'மாமியார் ஓட்டல்' என்ற பெயரில் நடத்தினார். அன்றைக்கு சென்னையில் உள்ள புகழ்பெற்ற அசைவ ஓட்டல்களில் ஒன்றாக இருந்தது. நடிக்காத நாட்களில் தானே ஓட்டலுக்கு சென்று பணியாற்றுவார். இதற்காகவே அந்த ஓட்டலில் கூட்டம் கூடிய நாட்களும் உண்டு.
காளி என்.ரத்னம் என்ற நடிகர்தான் முதல் முதலில் பாடி லேங்குவேஜ் எனப்படும், உடல்மொழி காமெடியை கொண்டு வந்தார். அவருக்கு பிறகு ஏ.கருணாநிதிதான் உடல்மொழி காமெடி செய்தார். 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்தில் அரண்மனை சமையல்காரன் வேடத்தில் நடித்தார். அவரது நடிப்பை பார்த்து வியந்த இயக்குனர் பந்துலு அவரது கேரக்டரை ஒற்றனாக மாற்றி பல காட்சிகளை வைத்தார். இதே போன்று 'அதே கண்கள்' படத்திலும் மலையாள சமையல்காரனாக நடித்து மலையாளம் கலந்த தமிழ் பேசினார். டி.பி.முத்துலட்சுமிக்கு ஜோடியாக அதிகமான படங்களில் நடித்தார்.




