அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் | திருநெல்வேலி செல்ல பாஸ்போர்ட் கேட்க மாரிசெல்வராஜ் | முதல்ல திருமண மண்டபம் : வேகமெடுக்கும் நடிகர் சங்க பணிகள் | படை தலைவன் படத்தில் விஜயகாந்த் காட்சிக்கு வரவேற்பு | இரண்டு மனைவிகளுடன் விவகாரத்து : வெளிப்படையாகப் பேசிய அமீர்கான் | கரிஷ்மா கபூர் முன்னாள் கணவர் திடீர் மரணம் | ஜுலை, ஆகஸ்ட்டில் 'துருவ நட்சத்திரம்' படத்தை வெளியிட முயற்சி | விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது 'மெர்சல்' |
2000ம் ஆண்டு காதல் ரோஜாவே படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் பூஜா குமார். இவர் தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே பல ஹாலிவுட் படங்களில் நடித்தவர். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்தவர், சிறிய இடைவெளிக்குப் பின்னர் கமலின் விஸ்வரூபம் படம் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கத் தொடங்கினார். அதை தொடர்ந்து அவர் மீன் குழம்பும் மண் பானையும், விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் ஆகிய படங்களில் நடித்தார். கடந்த 20 வருடங்களாக பல்வேறு இந்திய மொழித் திரைப்படங்களில் நடித்து வரும் பூஜா குமார், மிஸ் இந்தியா யுஎஸ்ஏ பட்டம் பெற்றவர்.
தொழிலதிபர் விஷால் ஜோஷி என்பவருடன் பூஜா குமார் வாழ்ந்து வருவதாக நீண்டகாலமாக இணையத்தில் ஒரு தகவல் பரவி வந்தது. ஆனால் இது பற்றி பூஜா குமாரோ அல்லது விஷால் ஜோஷியோ வாய் திறக்காமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், விஷால் ஜோஷி தனது சமூகவலைதளப் பக்கத்தில் நடிகை பூஜாகுமாரோடு இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து இருப்பதாகவும் அந்தக் குழந்தைக்கு நாவ்யா எனப் பெயரிட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.
பூஜா குமாரின் இந்த ரகசிய திருமணம் மற்றும் குழந்தை பற்றிய தகவல்களால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம் சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருக்கும் பூஜா, இதுப்பற்றி எந்த ஒரு பதிவும் போடாமல் உள்ளார்.