தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் | 'முத்த மழை' சர்ச்சை பற்றி எதுவும் பேசாத தீ | ஒன்றரை லட்ச ரூபாய் 'டி ஷர்ட்' அணிந்த மகேஷ்பாபு | முன்னணி இயக்குனர்களின் தோல்வி : வருத்தத்தில் தமிழ் சினிமா | பிளாஷ்பேக்: 'சிறை'யின் குறைகள் | பிளாஷ்பேக் : ஆணாக அறிமுகமான விஜய நிர்மலா |
கொரானோ தளர்வுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டில் நவம்பர் 10ம் தேதி முதல் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டர்களைத் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், அதை 100 சதவீதமாக மாற்ற வேண்டும் என திரையுலகினர் சார்பில் அரசுக்கு பல முறை கோரிக்கை விடுக்கப்பட்டது. அதை ஏற்று அரசு இன்று 100 சதவீத இருக்கை அனுமதிக்கான உத்தரவை பிறப்பித்துள்ளது.
“சினிமா தியேட்டர்கள், மல்டிபிளக்ஸ் ஆகியவை ஏற்கெனவே உள்ள 50 சதவீத அனுமதியிலிருந்து 100 சதவீதமாக உயர்த்திக் கொள்ள ஏற்கெனவே தெரிவிக்கப்பட்ட நடைமுறைகளுடன் பின்பற்றுமாறு அனுமதி அளிக்கப்படுகிறது. திரைப்படக் காட்சிகளுடன் கோவிட் 19 பற்றிய முன்னெச்சரிக்கை விஷயங்களைத் திரையிட்டு படம் பார்க்க வருபவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது,” என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த உத்தரவிற்கு திரையுலகினர் வரவேற்பு தெரிவித்துள்ளார்கள்.