முதல் தெலுங்கு படத்தில் தோல்வியை சந்தித்த அதிதி ஷங்கர் | பிளாஷ்பேக்: ஒரு இசைமேதை தவிர்த்த பாடல், இன்னொரு இசைமேதை பாடிச் சிறப்பித்திருந்ததைச் சொல்ல “ஒரு நாள் போதுமா?” | அவுட்டோர்களுக்கும் தலையணையுடன் பயணிக்கும் ஜான்வி கபூர் | 'கந்தன் மலையில் கதாநாயகி இல்லை' எச்.ராஜா கலகல | மகாராஜாவை தொடர்ந்து மீண்டும் 100 கோடியை எட்டிப் பிடிக்கும் விஜய் சேதுபதி | கூலி படத்தில் சிவகார்த்திகேயன் சிறப்பு வேடத்தில் நடித்துள்ளாரா? | 210 கோடியை அள்ளிய ஆன்மிகப்படம் | 'சன்னிதானம்(P.O)' : சேரன், மஞ்சுவாரியர் வெளியிட்ட யோகிபாபு பட போஸ்டர் | ஒரே இரவில் இரண்டு விருதுகள்: மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | ‛தி இன்டர்ன்' பட ரீமேக்கில் இருந்து விலகிய தீபிகா படுகோனே |
தமிழ்நாட்டில் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதற்கு திரையுலகினர் பலர் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
ஒரு சில திரையுலகினரும் தியேட்டர்களில் 100 சதவீத இருக்கை அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிர் கருத்துக்களை முன் வைத்துள்ளார்கள். நடிகையும், இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் டாக்டர் ஒருவரின் முகப்புத்தகப் பதிவை டுவிட்டரில் பகிர்ந்து அவருடைய சொந்த கருத்துக்களையும் பதிவிட்டுள்ளார்.
“டாக்டர்களுக்கு திரையுலகம் என்ன நியாயத்தைக் கொடுக்கப் போகிறது ?, பணத்திற்காக வாழ்க்கையை வர்த்தகமாக்குவது ?, பொது போக்குவரத்து இயங்குகிறது ? ஆனால், மக்கள் கவலைப்படுவதில்லை என்பது தர்க்கமான ஒரு வாதம். தமிழ்நாடு நன்றாகவே இருந்து வருகிறது. ஆனால், தியேட்டர்களில் 50 சதவீத அனுமதி மட்டும் வழங்கலாமே, மக்களின் உடல்நலம் மிகவும் முக்கியமானது.
திரையுலகம் வாழ வேண்டும் என்று கருதினால் பெரிய ஹீரோக்கள் அவர்களது சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளட்டும். தயாரிப்பாளர்களுக்கு சுமையாக இருப்பதை நிறுத்துங்கள். அந்த வகையில் தொழிலை நடத்த முடியும். தினசரி ஊதியம் பெறுபவர்களுக்கும் வாழ்வாதாரத்தைக் கொடுக்க முடியும். 50 சதவீத அனுமதியிலேயே தேவையான வருவாயைப் பெற இயலும்.
தியேட்டர் உரிமையாளர்கள் கடினமான ஒரு நேரத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள், ஏற்றுக் கொள்கிறேன். அதே போல வேறு பல தொழில்களும் உள்ளன. மக்களின் உடல்நலத்திற்கு எந்த ஊறும் இல்லாமல் வேறு மாற்று முறைகளை அவர்கள் உருவாக்க வேண்டும். ஒரு தகவல் அது அனுப்பும் முறையைப் பொறுத்தே இருக்கிறது, அது எல்லாம் இயல்பாக இருப்பது போலவே சொல்கிறார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.