ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
யஷ் நடிக்கும் கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதிக பார்வையாளர்களை பெற்று தென்னிந்திய சினிமாவின் முதல் இடத்தையும் பிடித்தது. இந்த டீசரில் யஷ் எந்திர துப்பாக்கியின் குழலில் சிகரெட் பற்ற வைத்து புகைபிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சிக்கு கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெங்களூருவில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் யஷ் பொறுப்பான பணிகளை செய்கிறார். அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது. அவரது புதிய படமான கே.ஜி.எப்.2 படத்தில் அவர் சிகரெட் பிடிக்கும் கட்சி வெளியாகியுள்ளது. இந்த காட்சியை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.
ஏனென்றால் நடிகர்களை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள். இது அவரது ரசிகர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். புகைப்பிடிக்கும் காட்சியை நீக்கினால் அது இந்த சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் விஷயமாக இருக்கும். அரசின் இந்த கருத்து அனைத்து படங்களுக்கும் பொருந்தும். இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.