பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

யஷ் நடிக்கும் கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. பெரிய பட்ஜெட்டில் தயாராகும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. அதிக பார்வையாளர்களை பெற்று தென்னிந்திய சினிமாவின் முதல் இடத்தையும் பிடித்தது. இந்த டீசரில் யஷ் எந்திர துப்பாக்கியின் குழலில் சிகரெட் பற்ற வைத்து புகைபிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த காட்சிக்கு கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெங்களூருவில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நடிகர் யஷ் பொறுப்பான பணிகளை செய்கிறார். அவர் மீது எனக்கு மரியாதை உள்ளது. அவரது புதிய படமான கே.ஜி.எப்.2 படத்தில் அவர் சிகரெட் பிடிக்கும் கட்சி வெளியாகியுள்ளது. இந்த காட்சியை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.
ஏனென்றால் நடிகர்களை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின்பற்றுகிறார்கள். இது அவரது ரசிகர்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். புகைப்பிடிக்கும் காட்சியை நீக்கினால் அது இந்த சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் விஷயமாக இருக்கும். அரசின் இந்த கருத்து அனைத்து படங்களுக்கும் பொருந்தும். இவ்வாறு மந்திரி சுதாகர் கூறினார்.