2025ல் 50 கோடியைக் கடந்த 10வது படம் 'தலைவன் தலைவி' | பாய் பிரண்ட் உடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை | தமிழுக்காக 'வெயிட்டிங்' : சிரிக்கும் சினேகா | எல்லோருடைய வாழ்க்கையையும் வாழ ஆசை: மாசாந்த் நடராஜன் | பணம், புகழ் இருந்தாலும், நிம்மதி, கவுரவம் முக்கியம்: ரஜினிகாந்த் பேச்சு | ஜூன் ஜூலையில் பள்ளிகள் வேண்டாம் ; மலையாள இயக்குனர்கள் அரசுக்கு கோரிக்கை | மோகன்லாலும் மம்முட்டியும் கண்டுகொள்ளவில்லை ; பன்னீர் புஷ்பங்கள் சாந்தி கிருஷ்ணா வருத்தம் | ‛ஜனநாயகன்' படத்தில் நரேன் நடிக்கும் வேடம் இதுதான் | ‛கிச்சா' என்கிற பெயர் தன்னுடன் ஒட்டிக்கொண்டது எப்படி ? சுதீப் புதிய தகவல் | 'தீ' ரஜினியை ரி-க்ரியேட் செய்துள்ளாரா லோகேஷ்? |
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பலர் பணத்தை இழப்பதும் சிலர் தற்கொலை செய்து கொள்வதும் வாடிக்கையாகி விட்டது. திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் பலர் இந்த ஆன்லைன் ரம்மியை விளம்பரப்படுத்துகின்றனர். சமீபத்தில் மதுரையை சேர்ந்த ஒருவர், சூதாட்ட விளையாட்டுக்களை தடைசெய்ய வேண்டும் என்று மனு செய்திருந்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விளையாட்டை விளம்பரப்படுத்தி வரும் நடிகர்கள் தமன்னா, பிரகாஷ்ராஜ், சுதீப், கிரிகெட் வீரர் விராட் கோலி உள்ளிட்ட பிரபலங்களுக்கும் மத்திய மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
இந்தநிலையில் சமீபத்தில் கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 27 லட்ச ரூபாயை இழந்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து கேரள நீதிமன்றத்தில், ஒருவர் இதுகுறித்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, தமன்னா, பிரபல மலையாள காமெடி நடிகர் அஜு வர்கீஸ் மற்றும் கேரள அரசு ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.