தேசிய விருது : தேர்வு குழுவிற்கு நடிகை ஊர்வசி கேள்வி | மீரா மிதுனை கைது செய்து ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு | மீண்டும் ஹிந்தி படத்தில் கமிட்டான ராஷி கண்ணா | ஜூனியர் என்டிஆர் உடன் நடித்தது ஒரு கற்றல் அனுபவம் : சொல்கிறார் ஹிருத்திக் ரோஷன் | ரஜினிக்கும், தனது தந்தைக்கும் உள்ள ஒற்றுமையை கூறிய லோகேஷ் | குடும்பத்துடன் திருப்பதியில் சாமி தரிசனம் செய்த சூர்யா | துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? |
சினிமாவில் வாய்ப்பு பெறுவதற்கும், திறமையை காட்டுவதற்கும் விசிட்டிங் கார்டாக இருப்பது குறும்படங்கள் தான். விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, கருணாகரன், யோகிபாபு உள்ளிட்ட பல நடிகர்கள் குறும்படங்களில் நடித்து அதன் மூலம் சினிமாவுக்கு வந்தவர்கள்.
அந்த வரிசையில் இப்போது ஒரு நடிகையும் குறும்படத்தில் இருந்து சினிமாவுக்கு வந்திருக்கிறார். அவர் பெயர் ஸ்வேதா ஷ்ரிம்டன். பல குறும்படங்களிலும், விளம்பர படங்களிலும் நடித்தவர், இனி ஒரு காதல் செய்வோம் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனர் ஹரிஹரன் எழுதி, இயக்குகிறார். புதுமுகம் அஜய் பாலகிருஷ்ணா கதாநாயகனாக அறிமுகமாகிறார். கோபிநாத் சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ரேவா எனும் பெண் இசையமைப்பாளர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
படம் பற்றி இயக்குனர் ஹரிஹரன் கூறியதாவது: 90களில் பிறந்தவர்களின் கல்லூரி வாழ்க்கையையும், நட்பையும், காதல் மற்றும் பிரிவையும் பிரதிபலுக்கும் வண்ணம் படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க காதல் மற்றும் காமெடியுடன் கலகலப்பாக நகரும் திரைக்கதை. 90 காலகட்டத்தை திரைக்கு கொண்டுவர கலை இயக்குனர் நிறைய உழைத்திருக்கிறார். சென்னை, புதுச்சேரியில் படமாக்கப்பட்டுள்ளது என்றார்.