ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
கருப்பு, வெள்ளையில் இருந்த சினிமாவை உயர்தர வண்ணத்திரையாக மாற்றியவர்களில் முக்கியமானவர்கள் அசோக்குமாரும், நிவாசும். அசோக்குமார் ஆந்திராவில் இருந்து வந்தவர். நிவாஸ் கேரளாவில் இருந்து வந்தவர். இருவருமே பிலிம் இன்ஸ்ட்டிடியூட்டில் படித்து சினிமாவுக்கு வந்தவர்கள்.
பாரதிராஜாவின் ஆரம்பகால வெற்றிக்கு பெரிதும் துணை நின்றவர் நிவாஸ். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரெயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள் ஆகிய படங்களை வண்ணமயமாக கொடுத்து படங்களின் வெற்றிக்கு துணை நின்றவர். ரஜினி நடித்த தனிக்காட்டு ராஜா, கமல் நடித்த சலங்கைஒலி உள்ளிட்ட பல வெள்ளி விழா படங்களில் ஒளிப்பதிவாளராகவும் இருந்தார். மலையாளத்தில் வெளிவந்த மோகினியாட்டம் படத்திற்காக தேசிய விருதும் பெற்றார்.
பாரதிராஜா நடித்த கல்லுக்குள் ஈரம், எனக்காக காத்திரு, நிழல் தேடும் நெஞ்சங்கள், செவ்வந்தி ஆகிய படங்களை இயக்கினார். பாலிவுட் படங்களையும் சேர்த்து 60க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள நிவாஸ், முதுமை காரணமாக சினிமாவில் இருந்து விலகி தனது சொந்த ஊரான கோழிக்கோட்டில் குடும்பத்னருடன் வசித்து வந்தார்.
80 வயதான நிவாஸ் கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலன் இன்றி நேற்று மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு மலையாள திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.