இந்த வயதில் இப்படி நடிக்கவே விருப்பம் : ஸ்ரீலீலா | கூலி படம் ரிலீஸ் : பெங்களூர் ராமகிருஷ்ணா ஆசிரமத்துக்கு சென்ற ரஜினி | ஷாரூக், சுனில் ஷெட்டி, அமிதாப், பாபி தியோல் வரிசையில் அமீர்கான் | வளைந்து செல்லாதீர்கள், தைரியமாக இருங்கள் : பெண்களுக்கு சுவாசிகா அறிவுரை | சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது! | 'கைதி 2'க்கு முன்பாக ஹீரோவாக நடிக்கப் போகும் லோகேஷ் கனகராஜ் | ‛பாகுபலி தி எபிக்' ஐமேக்ஸ் வடிவிலும் வெளியாகிறது : படக்குழு அறிவிப்பு | ‛கூலி': 3 மில்லியனை நெருங்கும் பிரிமியர் வசூல் | ரசிகர்களுடன் ‛கூலி' படம் பார்த்த திரைப்பிரபலங்கள் | ‛குட் டே' முதல் ‛ஜேஎஸ்கே' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? |
பூவரசம் பீ பீ, சில்லுக்கருப்பட்டி படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹலீதா ஷமீம். அவர் தற்போது இயக்கி உள்ள படம் ஏலே. வருகிற 12ந் தேதி வெளிவருகிறது. இதில் சமுத்திரகனியுடன், மணிகண்டன், மதுமிதா என்ற புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். தந்தை, மகனுக்கு இடையிலான கிராமத்து கதை.
ஹலீதா ஷமீமின் படங்களில் தொடர்ந்து சமுத்திரகனி நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: சமுத்திரகனியிடம் நான் சினிமா கற்றவள். ஆனால் நான் எந்த கதை எழுதும்போதும் அவரை மனதில் வைத்துக் கொண்டு எழுதுவதில்லை. பூவசரம் பீ பீ படத்தில் நட்புக்காக ஒரு சிறிய கேரக்டரில் நடித்துக் கொடுத்தார். சில்லுக்கருப்பட்டியில் அவர் நடிக்கும்படியான ஒரு கேரக்டர் இருந்தது.
ஏலே படத்தின் கதை பல ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதியது. கதை எழுதியபோது தந்தை கேரக்டரில் நடிக்க நான் வேறு சில நடிகர்களைத்தான் யோசித்து வைத்திருந்தேன். ஆனால் அது படமாகும்போது அவர்தான் நடிக்கும்படி ஆனது. இது திட்டமிடப்படவில்லை, அதுவாக அமைந்தது.
நான் சினிமாவுக்கு வந்த காலத்தில் ஒரு பெண்ணாக சினிமாவில் இயங்குவது, அதுவும் இயக்குனராக இயங்குவது சற்று சிரமமாக இருந்தது. ஆண்களுடன் பணியாற்றுவதில் எனக்கு சிரமம் இருந்தது. ஒரு பெண்ணுடன் பணியாற்றுவதில் ஆண்களுக்கு சிரமம் இருந்தது. ஆனால் இப்போது அப்படியில்லை. பெண் இயக்குனர்களுக்கு உரிய மரியாதையை இளம் தலைமுறையினர் தருகிறார்கள். சினிமாவில் நல்லவர்கள் அதிகம். அவர்களை தேடிக் கண்டுபிடிப்பது தான் சிரமம். நான் அப்படி சில நல்லவர்களை கண்டுபிடித்திருக்கிறேன். எனது சினிமா பயணம் அவர்களுடன் தொடர்ந்து கொண்டிருக்கிறது. என்றார்.