பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த வருடத்தில் சுமார் ஒன்பது மாதங்கள் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்தன. அதன்பின் நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் அவ்வளவாக வெளியாகவில்லை.
50 சதவீத இருக்கைகளுக்குத்தான் அனுமதி என்பதால் பலரும் படங்களை வெளியிடத் தயங்கினார்கள். ஆனால், அதையும் மீறி விஜய் நடித்த 'மாஸ்டர்' படம் வெளியானது. பாதி இருக்கைகள்தான் என்றாலும் மக்கள் படத்தைப் பார்க்க ஆர்வம் காட்டியதால் படம் 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது.
கடந்த மாத பொங்கல் வெளியீடுகளுக்குப் பிறகு நேற்று முதல் தமிழ் சினிமா மீண்டும் பழைய பரபரப்புடன் தயாராகிவிட்டதாகவே தெரிகிறது. நேற்று 'களத்தில் சந்திப்போம், ட்ரிப், சிதம்பரம் ரயில்வே கேட், ஆட்கள் தேவை' ஆகிய நான்கு படங்கள் வெளிவந்தன.
அடுத்த வாரம் பிப்ரவரி 12ம் தேதியன்று, “பாரிஸ் ஜெயராஜ், குட்டி ஸ்டோரி, கேர் ஆப் காதல், நானும் சிங்கிள்தான், ஏலே” ஆகிய ஐந்து படங்கள் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.
அடுத்து பிப்ரவரி 19ம் தேதியன்று விஷால் நடித்துள்ள 'சக்ரா' படம் வெளியாக உள்ளதாக ஏற்கெனவே அறிவித்துவிட்டார்கள். அன்றைய தினம் மேலும் சில படங்களும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பழையபடி வாராவாரம் நான்கைந்து படங்கள் வரத் தயாராகியுள்ளதால் தமிழ் சினிமா உலகில் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.