பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி மிகப்பெரிய வெற்றியை ருசித்தவர் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அதனாலேயே தற்போது ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து, அவர் இயக்கிவரும் ஆர்ஆர்ஆர்' படத்திற்கு தெலுங்கு தவிர மற்ற மொழிகளிலும் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தப்படம் வரும் அக்-13ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் நிலையில் இதன் மற்ற மொழி வெளியீட்டு உரிமைகளுக்கான வியாபாரம் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தமிழில் இந்தப்படத்தின் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் சுமார் 42 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தின் பப்ளிசிட்டி மற்றும் இதர செலவுகளை கணக்கிட்டால் சுமார் 50 கோடியை இந்தப்படத்திற்காக இறக்குகிறதாம் லைகா நிறுவனம், அதேசமயம், இந்த சூழலில், படத்தின் வசூலில் தனது 50 கோடி அசலுடன் லாபத்தையும் பார்க்கவேண்டிய ரிஸ்க் லைகாவுக்கு இருக்கிறது என்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் சொல்லப்படுகிறதாம்.