பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

மலையாளத்தில் கடந்த எட்டு வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றிபெற்ற படம் த்ரிஷ்யம். மோகன்லால் மீனா உள்ளிட்ட அதே கூட்டணியுடன் சமீபத்தில் இதன் இரண்டாம் பாகத்தை 'த்ரிஷ்யம்-2'வாக இயக்கி வெளியிட்டார் இயக்குனர் ஜீத்து ஜோசப். முதல் பாகத்திற்கு இணையான த்ரில் மற்றும் திருப்பங்களுக்கு சற்றும் குறைவில்லாமல் உருவாகியுள்ள இந்தப்படம் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து வருகிறது. அதேசமயம் இரண்டாம் பாகத்தை பார்த்தவர்கள் பலரும், கதை இத்துடன் முடிவதால் 3ஆம் பாகத்துக்கு வாய்ப்பு இல்லையென்றே கருதினார்கள்.
இந்தநிலையில் இந்தப்படத்திற்கு மூன்றாம் பாகம் இருக்கிறது என்றும் அதற்கான க்ளைமாக்ஸ் காட்சியையும் தான் உருவாக்கி விட்டதாகவும் கூறி ரசிகர்களுக்கு எதிர்பாராத சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இயக்குனர் ஜீத்து ஜோசப். சமீபத்தில் கொச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஜீத்து ஜோசப், “த்ரிஷ்யம்-3க்கான க்ளைமாக்ஸை உருவாக்கிவிட்டேன் அதை மோகன்லாலிடமும், தயாரிப்பாளரிடமும் அதை கூறியபோது அவர்கள் ரொம்பவே ஆச்சர்யப்பட்டு போனார்கள். அதேசமயம் இந்தப்படத்தின் மூன்றாம் பாகம் எடுக்க வேண்டும் என்றால் அது கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் கழித்து தான் நடக்கும்.. அதற்குள் இன்னும் பல விஷயங்களை படத்திற்காக உருவாக்க வேண்டும்” என கூறியுள்ளார்.