ரஜிஷா விஜயனுக்கு கை கொடுக்கும் வருடமாக 2025 அமையுமா? | ஜோதிகா பட பெண் இயக்குனரின் படத்திற்கு கேரள அரசு வரி விலக்கு | பஹத் பாசில் பட தேசிய விருது கதாசிரியரின் இயக்கத்தில் நடிக்கும் 'ஜென்டில்மேன் 2' ஹீரோ | 'காந்தாரா-2' படப்பிடிப்பில் மீண்டும் ஒரு மலையாள நடிகர் மரணம் | பஹத் பாசில் - எஸ்ஜே சூர்யா படம் டிராப் ஏன்? மனம் திறந்த இயக்குனர் விபின் தாஸ் | விக்ரம் 63 படம் கைவிடப்பட்டதா? | கூலி, குபேரா படங்கள் குறித்து நாகார்ஜுனா வெளியிட்ட தகவல் | அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன் | தக் லைப் படத்தின் எட்டாவது நாள் வசூல் என்ன | சிம்புவை பற்றி பேச மறுக்கும் நிதி அகர்வால் |
தமிழ் சினிமா கடந்த ஒரு வருட காலமாகவே கொரோனா தாக்கத்தால் மிகவும் மோசமான பாதிப்புகளை சந்தித்து வருகிறது. கடந்த வருடம் மார்ச் மாத மத்தியில் மூடப்பட்ட தியேட்டர்கள் நவம்பர் மாதம் 10ம் தேதிதான் மீண்டும் திறக்கப்பட்டது.
50 சதவீத இருக்கை அனுமதியுடன் திறக்கப்பட்டாலும் மக்கள் தியேட்டர்கள் பக்கம் வருவதைத் தவிர்த்தார்கள். பொங்கலை முன்னிட்டு வெளிவந்த 'மாஸ்டர்' படத்திற்கு மட்டுமே கூட்டம் வந்தது. அதன்பின்பு சில முன்னணி நடிகர்களின் படங்கள் வெளிவந்தாலும் அவற்றைப் பார்க்க பெரிதாக யாரும் ஆர்வம் காட்டவில்லை.
இதன் காரணமாக மல்டிபிளக்ஸ் தியேட்டர் வளாகங்களில் உள்ள பெரிய தியேட்டர்கள், பெரிய சிங்கிள் தியேட்டர்கள் பலவும் மூடப்பட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். சென்னையில் முக்கிய மல்டிபிளக்ஸ் வளாகமான சத்யம் காம்ப்ளக்சில் சத்யம், சாந்தம் ஆகிய தியேட்டர்களில் கடந்த பல நாட்களாகவே காட்சிகள் நடக்கவில்லையாம். அங்குள்ள சிறிய தியேட்டர்களை மட்டுமே திறந்து வைத்துள்ளார்களாம்.
தமிழ்நாட்டில் பெரும்பாலான தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை 100ஐத் தாண்டுவது அரிதாக உள்ளதாகச் சொல்கிறார்கள். இந்த நிலை எப்போது மாறும் என்ற பெரும் கவலையில் தியேட்டர்காரர்கள் இருக்கிறார்கள்.