தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

கொரோனா தாக்கம் கடந்த சில நாட்களாக ஒரு சில மாநிலங்களில் மீண்டும் அதிகரித்துள்ளது. சில மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்கள். அந்த விதத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவை மீண்டும் பிறப்பித்துள்ளார்கள். மேலும், மாஸ்க் அணிவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒரு மாநிலத்தில் ஒரு விஷயம் ஆரம்பிக்கப்பட்டால் அதை மற்ற சில மாநிலங்களும் பயன்படுத்த ஆரம்பிக்கும். அந்த விதத்தில் மகாராஷ்டிர மாநில அரசின் உத்தரவை அடுத்து தமிழ்நாட்டிலும் அது போன்ற உத்தரவு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டிலும் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும் என சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். ஏற்கெனவே தமிழ்நாட்டில் தியேட்டர்களுக்கு மக்கள் வருவதேயில்லை. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இங்கும் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கை அமல்படுத்தபடும் ஒரு சூழல் உருவாகி வருகிறது என்றே சொல்கிறார்கள்.