ஜனநாயகன் பட வழக்கில் ஜன., 27ல் தீர்ப்பு | அஜித் 64ல் நிறைய சர்ப்ரைஸ் இருக்கு : ஆதிக் ரவிச்சந்திரன் | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கும் பிரீத்தி முகுந்தன் | மணிகண்டன் படத்தை இயக்கும் தேசிங்கு பெரியசாமி | விஜய்க்கு தம்பியாக தனுஷ் : இயக்குனர் ஏ.வெங்கடேஷ் சொன்ன தகவல் | கவின் படத்தில் இணைந்த சிம்ரன் | கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் |

தெலுங்குத் திரையுலகில் குறுகிய காலத்தில் முன்னணி நடிகராகவும், பிரபலமானவராகவும் வளர்ந்தவர் விஜய் தேவரகொண்டா. 'அர்ஜுன் ரெட்டி' என்ற ஒரே ஒரு படம் அவரை உச்சத்துக் கொண்டு சென்றது.
தெலங்கானா மாநிலத்தில் தனது சொந்த ஊரான மெகபூப் நகரில் புதிதாக மல்டிபிளக்ஸ் தியேட்டர் ஒன்றைத் திறக்க உள்ளார் விஜய். ஏற்கெனவே சொந்தமாக 'ரவுடி வேர்' என்ற ஆடை கம்பெனியையும், கிங் ஆப் த ஹில் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தையும் வைத்துள்ள விஜய், அடுத்த பிஸினஸ் ஆக இந்த தியேட்டர் பிஸினஸ் இடம் பெறுகிறது.
பிரபல ஏசியன் சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து எவிடி, அதாவது ஏசியன் விஜய் தேவரகொண்டா சினிமாஸ் என்ற பெயரில் முதல் மல்டிபிளக்ஸ வளாகம் மெகபூப் நகரில் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. பவன் கல்யாண் நடித்து வெளிவர உள்ள 'வக்கீல் சாப்' படம் தான் முதன் முதலாகத் திரையிடப்பட உள்ளது.
ஏற்கெனவே ஏசியன் சினிமாஸ் நிறுவனம், ஐதராபாத்தில் எஎம்பி சினிமாஸ் என்ற பெயரில் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணைந்து பெரிய மல்டிபிளக்ஸ தியேட்டரைத் திறந்து நடத்தி வருகிறது.
தமிழ்நாட்டில் எந்த ஒரு நடிகரும் சொந்தமாக இன்னும் தியேட்டர்களை ஆரம்பிக்கவில்லை. ஆனால், சொந்தப் பட நிறுவனங்களை வைத்திருக்கிறார்கள்.




